நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது மிக அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மேலும் சருமம் வறட்சி அடையாமலும் பளபளப்பாகவும் இருக்கும். உடலில் நீர்ச்சத்து குறைபாடு மிகவும் கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும். தண்ணீர் பற்றாக்குறை பல கடுமையான நோய்களுக்கு வழிவகுப்பதோடு, உடல் உள் உறுப்புகளை சேதப்படுத்தும். தண்ணீர் பற்றாக்குறையால், வயிறு மற்றும் செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகளை ஒருவர் சந்திக்க நேரிடும்.
உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகம் உடலில் சேரும் கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும், இரத்தத்தை சுத்திகரிக்கும் வேலையையும் செய்கிறது. சிறுநீரகம் சரியாக செயல்பட போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். இல்லை என்றால், நீரிழப்பு, சிறுநீரகக் கற்கள், சிறுநீர்க பாதை தொற்று போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
பல நேரங்களில் மக்கள் அதிக தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும் என்று கருதுகிறார்கள். ஆனால், அளவிற்கு அளவு தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்தில், பாதிப்பை ஏற்படுத்தும் என பலருக்கு தெரிவதில்லை. குறிப்பாக சிறுநீரக ஆரோக்கியத்தில் கடுமையான பக்க விளைவை ஏற்படுத்துகிறது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பலர் அதைப் பற்றி அறியாமலேயே, ஆர்வக் கோளாறு காரணமாக அதிகப்படியான தண்ணீரை உட்கொள்கிறார்கள்.
உணவு அல்லது பானத்தின் மூலம் உடலுக்குள் நுழையும் பொருட்கள் இறுதியில் இரத்தத்தின் வழியாக சிறுநீரகங்களை அடைகின்றன. சிறுநீரகங்கள் உடலில் சேரும் அதிகப்படியான நீரை வடிகட்டி, சிறுநீர் வடிவில் வெளியேற்றுகின்றன. இது சிறுநீரகத்தின் திரவ சமநிலையை சீராக வைத்திருக்கிறது. சிறுநீரகமும் அதன் திறனுக்கு ஏற்ப இரத்தத்தை வடிகட்டுகிறது. சிறுநீரகத்தில் அதிக அழுத்தம் இருந்தால், சிறுநீரகத்தின் திறன் பாதிக்கப்படலாம். இது சிறுநீரக நோயை ஏற்படுத்தும்.
அளவிற்கு அதிக தண்ணீர் சிறுநீரகத்திற்கு சேதம் விளைவிக்கும்
தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். சிறுநீரகங்கள் ஒரு மணி நேரத்திற்கு .8 அல்லது 1 லிட்டர் தண்ணீரை மட்டுமே வடிகட்ட முடியும். இதை விட அதிக அழுத்தம் இருந்தால், அதிகப்படியான நீரேற்றம் ஏற்படலாம். அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது இரத்தத்தில் சோடியத்தின் அளவைக் குறைக்கிறது. இது குழப்பமான மனநிலை அல்லது ஹைபோநெட்ரீமியாவிற்கும் வழிவகுக்கும். அதிகப்படியான நீரேற்றத்தால் சிறுநீரக செயல்பாடும் பாதிக்கப்படலாம்.
நாள் ஒன்றுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
உடலையும் சிறுநீரகங்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க, நாள் முழுவதும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது போதுமானதாகக் கருதப்படுகிறது. இந்த அளவு 6 லிட்டர் வரை கூட எட்டலாம். இதை விட அதிகமாக தண்ணீர் குடிப்பது உடலுக்கும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். அதிகப்படியான நீரேற்றம் காரணமாக, மூளை உட்பட உடலின் பிற செல்களும் வீக்கமடையக்கூடும். இதனுடன், வாந்தி மற்றும் தலைவலியும் ஏற்படலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | காலை நடைப்பயிற்சி தொடங்குவதற்கு முன் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ