)
Neem Leaves Foods for Diabetes Control: நீரிழிவு நோயாளிகள் எப்போதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு உணவில் அதிக கட்டுப்பாடு தேவை. இதனுடன் உடல் செயல்பாடும் இதற்கு மிக அவசியம். நீரிழிவு நோய் இன்னும் சில நோய்களுக்கும் காரணமாகலாம். ஆகையால், இதை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வெண்டியது மிக அவசியமாகும்.
சில இயற்கையான, எளிய வழிகளிலும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க ஆயுர்வேத இலையான வேப்பிலை மிக உதவியாக இருக்கும். வேப்பிலை கொண்டு இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் முறை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வேப்பிலை
வேம்பின் இலைகள், பட்டை மற்றும் விதைகள் அனைத்தும் ஆயுர்வேத பண்புகளைக் கொண்டுள்ளன. வேப்பிலை ஆயுர்வேத சிகிச்சை முறையில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு மருத்துவ தாவரமாகும். இது ஆயுர்வேதத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைகள், பட்டை மற்றும் விதைகள் பல நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. வேம்பு இலைகளில் ஃபிளாவனாய்டுகள், சபோனின்கள் மற்றும் டானின்கள் போன்ற பல முக்கியமான சேர்மங்கள் உள்ளன. அவை ஆண்டிஆக்சிடெண்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இது தவிர, வேமப்பிலையில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் உள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
வேப்பிலையில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன
வேப்பிலையில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதன் காரணமாக அவை நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆயுர்வேதத்தின்படி, வேப்பிலையில் கசப்பு சுவை கொண்ட சாறு உள்ளது. இது உடலில் உள்ள இனிப்பு சாற்றை அதாவது இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது.
வேப்பிலைகள் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகின்றன. வேப்பிலையில் சில சிறப்பு சேர்மங்களும் உள்ளன. அவை இன்சுலின் உணர்திறனை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். இந்த இலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது நீரிழிவு நோயால் ஏற்படும் சிக்கல்களைக் குறைக்கும்.
ஒரு நாளைக்கு எத்தனை வேப்பிலைகளை உட்கொள்ள வேண்டும?
நீரிழிவு நோயாளிகள் தினமும் 5-10 வேம்பு இலைகளை சாப்பிடுவதால் நல்ல பயன் கிடைக்கும். ஆனால் இந்த இலைகளை மருந்து அல்லது இன்சுலின் அளவிற்கு மாற்றாகக் கருத முடியாது. இந்த இலைகளை நீங்கள் ஒரு துணைப் பொருளாக மட்டுமே பயன்படுத்தி நன்மைகளைப் பெறலாம்.
வேப்பிலையை சாப்பிடுவதற்கு முன்...
இரத்த சர்க்கரையில் அதிக ஏற்ற இறக்கங்கள் உள்ள நீரிழிவு நோயாளிகள் வேப்பிலையை சாப்பிடுவதற்கு முன் தங்கள் மருத்துவரை அணுக வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வேப்பிலையை சாப்பிடக்கூடாது. அவ்வாறு செய்வது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ