தற்போது தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இதனால் வெளியில் செல்ல முடியாமல் பலரும் திணறி வருகின்றனர். வெயில் காலத்தில் பலரும் நீரேற்றத்துடன் இருக்க இளநீர், பழச்சாறு போன்றவற்றை தேடி தேடி பருகி வருகின்றனர். இந்த கோடைகாலத்தின் வருகையுடன் துடிப்பான தெரு வோர கடைகளும் உயிர் பெற்றுள்ளது. இந்த பருவத்தில் மிகவும் விரும்பப்படும் ஜூஸ் வகைகளில் ஒன்றாக கரும்புச்சாறு உள்ளது. வெப்பத்திலிருந்து நிவாரணம் தேடுபவர்களுக்கு தெருவோர கரும்பு ஜூஸ் கடைகள் இனிப்பான மற்றும் புத்துணர்ச்சியான பானத்தை வழங்குகிறது. பலருக்கு, இந்த ருசியான பானம் நீரேற்றத்தின் ஆதாரமாக அமைகிறது.
மேலும் படிக்க | 4 மாதங்களில் வெயிட் லாஸ் செய்ய வரலட்சுமி செய்த 4 விஷயங்கள்! ரொம்ப சிம்பிள்..
இருப்பினும், இந்த கோடை வெயிலின் தாக்கத்தை கரும்பு ஜூஸ் குறைத்தாலும், உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் கூறுகள் இவற்றில் நிறைந்துள்ளன. கரும்புச் சாற்றின் சுவை மற்றும் கவர்ச்சி மறுக்க முடியாததாக இருந்தாலும், சாலையோர வியாபாரிகளிடமிருந்து அதை உட்கொள்ளும் போது பல விஷயங்களை கவனிக்க வேண்டும். குறிப்பாக அவற்றின் சுகாதாரமற்ற செய்முறை கவலையளிக்கின்றன. பல விற்பனையாளர்கள் தங்கள் பானங்களைத் தயாரிக்க அசுத்தமான நீர் மற்றும் ஐஸ் கட்டிகளை பயன்படுத்துவதால், மாசுபாடு ஒரு பெரிய பிரச்சினையாகும். இந்த கவனக்குறைவான நடைமுறையானது பல வைரஸ் நோய்கள் மற்றும் இரைப்பை குடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
இந்த சாலையோரக் கடைகளில் கரும்பு பிழியும் இயந்திரம் முதல் சாறு பரிமாறும் கிளாஸ் வரை அனைத்திலும் பாக்டீரியா மற்றும் அழுக்குகள் அதிக அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த அபாயங்களை மேலும் அதிகப்படுத்தும் விதமாக, சிவப்பு கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் கரும்பு சாறு குடிப்பது வயிற்றுப்போக்கு மற்றும் பல்வேறு வயிற்று நோய்கள் போன்ற விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. கூடுதலாக, தரமற்ற ஐஸ் கட்டிகள் தொண்டை புண் மற்றும் ஜலதோஷத்திற்கு கூட வழிவகுக்கும். சிலருக்கு தலைவலியை கூட ஏற்படுத்தும்.
கரும்புகளை பிழியும் இயந்திரங்கள் நீண்ட நாட்கள் சுத்தம் செய்யப்படாமல் இருக்கும் போது மாசுபாட்டின் அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது. எனவே சாலையோர வியாபாரிகளிடமிருந்து கரும்புச் சாற்றை உட்கொள்வதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்குமாறு சுகாதார நிபுணர்கள் கடுமையாக அறிவுறுத்துகின்றனர். கரும்பு ஜூஸ் அதன் இனிப்பு, சுவைக்காக அறியப்பட்டாலும் உடல்நல சிக்கல்களுக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கலாம். எனவே உங்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதும், சுகாதாரமான மாற்று வழிகளைத் தேடுவதும் அவசியமானது. கரும்புச்சாறு கடைகள் கோடையில் பிரதானமான ஜூஸ் ஆக இருந்தாலும், அவற்றை எச்சரிக்கையுடன் அணுகுவது அவசியம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | 62 வயதிலும் உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் நடிகை! ‘இந்த’ 1 குழம்பு உதவியதாம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









