Home Remedies for Rashes: கோடை காலம் என்றாலே அது சுட்டெரிக்கும் வெயில் மற்றும் ஈரப்பதத்தின் காலமாக பார்க்கப்படுகின்றது. வெயில் காலத்தில் பல வித சரும பிரச்சனைகளையும் நாம் எதிர்கொள்கிறோம். இன்றைய மாசுபாடு நிறைந்த காலகட்டத்தில், வெயில் காலத்தில் சருமப் பிரச்சனைகள் மிகவும் பொதுவாகிவிட்டன.
கோடையில் உங்களுக்கும் சரும பிரச்சனைகள் ஏற்படுகின்றனவா? அரிப்பு பிரச்சனை உள்ளதா? அப்படி இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். இந்த காலத்தில், தோல் சிவப்பு, அரிப்பு, தோலில் தடிப்புகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அதிக பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.
இந்தப் பிரச்சனைகள் பெரும்பாலும் நமது சருமத்தின் துளைகளில் வியர்வை சிக்கி, தோலில் சிறிய தடிப்புகள் வடிவில் தோன்றும் போது ஏற்படுகின்றன. இவற்றை நாம் 'வேர்க்குரு' அல்லது வெப்பத் தடிப்புகள் என்று குறிப்பிடுகிறோம்.
மருத்துவ அழகுக்கலை நிபுணர் டோலி ஷாவின், "வியர்வை தோலில் சிக்கி வெளியே வர முடியாமல் போகும்போது வேர்க்குருவும் அரிப்பும் ஏற்படுகின்றது. இது எரிச்சல், அரிப்பு மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இவை பெரும்பாலும் முகம், கழுத்து, முதுகு மற்றும் மார்பில் ஏற்படும்." என கூறுகிறார். மேலும், கோடையில் இந்தப் பிரச்சனையை மேலும் அதிகரிக்கும் சில விஷயங்களும் உள்ளதாக தோல் நிபுணர் நந்திதா கோபிநாத் கூறுகிறார்.
வேர்க்குரு, தோல் அரிப்பு, தடிப்பு ஆகிய பிரச்சனைகளால் அதிகம் பாதிக்கப்பட்டும் நபர்கள் சிலவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும். தோல் பிரச்சனைகள் உள்ள நபர்கள் விலகி இருக்க வேண்டிய 5 விஷயங்களைப் பற்றி இந்த பதிவி காணலாம்.
1. சிந்தடிக் துணிகள்
இந்த ஆடைகள் வியர்வையை உறிஞ்சாது, மாறாக தோலில் ஒட்டிக்கொள்கின்றன. இது பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது.
2. இறுக்கமான ஆடைகளை அணிதல்
இறுக்கமான ஆடைகள் காற்றின் ஓட்டத்தைத் தடுக்கின்றன. மேலும் காற்றோட்டம் இல்லாததால், வியர்வை தோலில் சேர்ந்து, வெப்பத் தடிப்புகள் வேகமாகப் பரவ காரணமாகின்றன.
3. பகலில் கடுமையான வெயிலில் செல்வது
வலுவான சூரிய ஒளி மற்றும் வெப்பக் காற்று நேரடியாக உடலின் மீது படுவதால், தோல் எரிந்து, வெப்பத் தடிப்பு பிரச்சனை அதிகரிக்கிறது. ஆகையால் வெயில் காலத்தில் வெளியே செல்லும்போது, குடை அல்லது தொப்பியை பயன்படுத்துவது அறிவுறுத்தப்படுகின்றது.
4. அழுக்கான அல்லது வியர்வையுடன் கூடிய ஆடைகளை மீண்டும் மீண்டும் அணிவது
ஒரே ஆடையை மீண்டும் மீண்டும் அணிவதால், அதில் சேரும் வியர்வை மற்றும் அழுக்கு காரணமாக சருமம் சேதமடையும். எப்போதும் சுத்தமான மற்றும் உலர்ந்த ஆடைகளை அணிவது நல்லது.
5. தோலில் அடிக்கடி அரிப்பு ஏற்படுதல்
அரிப்பிலிருந்து நிவாரணம் பெற தோலை மீண்டும் மீண்டும் தேய்ப்பதால், காயங்கள் மற்றும் தொற்றுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளன.
எச்சரிக்கையாக இருப்பதே பாதுகாப்பான விஷயம்
கோடையில் ஏற்படும் வெப்பத் தாக்கத்தைத் தவிர்க்க, லேசான பருத்தி ஆடைகளை அணிவது, பகலில் குளிப்பது, சருமத்தை குளிர்ச்சியாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பது, மேலும் பாந்தெனால், துத்தநாக ஆக்சைடு போன்ற சருமத்திற்கு இதமான பொருட்களைப் பயன்படுத்துவது ஆகியவற்றை பழக்கமாக்கிக்கொள்ளலாம். சரும பாதுகாப்பில் கவனம் செலுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால், கண்டிப்பாக கோடைக்காலத்தையும் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் கழிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ