ஆயுர்வேதத்தை பாதுகாத்து... மக்கள் வாழ்க்கை முறையை மாற்றிய பதஞ்சலி

பாபா ராமதேவ் அவர்கள் ஆயுர்வேதத்தை இன்றியமையாத அறிவியலுடன் இணைத்து உலகெங்கிலும் அறிமுகப்படுத்தியதன் மூலம், மக்கள் மத்தியில் ஆரோக்கியம் பற்றிய எண்ணங்களை முற்றிலும் மாற்றியுள்ளார். இதனால் பதஞ்சலி ஆயுர்வேதம் பெரிய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கடும் போட்டியை  வழங்கியது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 28, 2025, 03:21 PM IST
  • ஆயுர்வேதத்தை மீண்டும் மக்களின் வாழ்க்கையில் கொண்டு வந்த பதஞ்சலி.
  • பதஞ்சலி மக்கள் மனதை எப்படி கவர்ந்தது?
  • இந்திய உற்பத்திகளுக்கு நவீனமான தோற்றம் கொடுத்த பதஞ்சலி.
ஆயுர்வேதத்தை பாதுகாத்து... மக்கள் வாழ்க்கை முறையை மாற்றிய பதஞ்சலி

பாபா ராமதேவ் அவர்கள் ஆயுர்வேதத்தை இன்றியமையாத அறிவியலுடன் இணைத்து உலகெங்கிலும் அறிமுகப்படுத்தியதன் மூலம், மக்கள் மத்தியில் ஆரோக்கியம் பற்றிய எண்ணங்களை முற்றிலும் மாற்றியுள்ளார். இதனால் பதஞ்சலி ஆயுர்வேதம் பெரிய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கடும் போட்டியை  வழங்கியது. 2006ம் ஆண்டில் பாபா ராமதேவ் மற்றும் ஆசார்யா பாலகிருஷ்ணா தொடங்கிய பதஞ்சலி, இப்போது இந்தியாவில் பல பில்லியன் ரூபாய் வணிகத்தை உருவாக்கி விட்டது. ஆனால், பதஞ்சலி ஆயுர்வேதத்தை காப்பாற்றி, புதிய காலத்திற்கு ஏற்றதாக மாற்றுவதில் எந்த வகையான பங்கு வகித்தது என்பதை நாம் நன்கு அறிந்திருக்கமாட்டோம். அதைக் கொஞ்சம் புரிந்துகொள்வோம்.

Add Zee News as a Preferred Source

பதஞ்சலி மக்கள் வாழ்க்கை முறையை எப்படி மாற்றியது?

பதஞ்சலி ஆயுர்வேதம் தொடங்கியபோது, முதலில் 'திவ்ய ஃபார்மஸி' என்ற பெயரில் ஆயுர்வேத மருந்துகள் மட்டும் விற்கப்படுவதாக இருந்தது. ஆனால் பின்னர் பதஞ்சலி பிராண்டின் கீழ், நிறுவனம் பற்கள் துவைக்கும் பேஸ்ட், ஷாம்பு, சோப்பு மற்றும் மற்ற தினசரி பயன்பாட்டிற்கான பொருட்களை சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதில் "தந்த் க்ராந்தி" பற்களுக்கான பேஸ்ட் மிகவும் பிரபலமானது மற்றும் பதஞ்சலியின் ஹீரோ ப்ரொடக்டாக மாறியது.

பதஞ்சலியின் பற்களுக்கான பேஸ்ட் தயாரிப்புகள் பிரபலமாகி, சந்தையில் இருந்த பெரும்பாலான பற்கள் துலக்கும் பேஸ்ட்களின் விற்பனை குறைந்தது. இதனால் பெரிய நிறுவனங்கள் தங்கள் பிரபலமான ப்ரண்டுகளும் தங்கள் தயாரிப்புகளில் "ஆயுர்வேத பொருட்களை" சேர்ந்து, ஆயுர்வேத நலன் உள்ள பொருட்கள் என விற்பனை செய்ய ஆரம்பித்தன. இதன் மூலம், பதஞ்சலி ஆயுர்வேத பொருட்களை மட்டும் விற்கவில்லை, ஆனால் ஆயுர்வேதத்தை மீண்டும் மக்களின் வாழ்க்கையில் கொண்டு வந்து, அவர்கள் வாழ்க்கை முறையை மாற்றியது.

பதஞ்சலி மக்கள் மனதை எப்படி கவர்ந்தது?

இந்தியர்கள் மசாலாக்கள், தானியங்கள் மற்றும் கை வைத்தியங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள். ஆயுர்வேதம் பாட்டி காலத்து மருத்துவ முறைகள் அல்லது சில பழங்கால ஆயுர்வேதர்களின் வழிகாட்டல் என்ற எண்ணம் மக்கள் மனதில் இருந்தது. எனவே, பதஞ்சலி தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும் சுத்தமானது மற்றும் ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்படுவதாக இருந்ததால், மக்கள் பெரிதும் அதனை நோக்கி ஈர்க்கப்பட்டனர். பாபா ராமதேவ் வீடியோவின் மூலம் நிறுவனத்தின் தொழிற்சாலைகளுக்கு அவர்களை அழைத்து சென்று ஆயிர்வேத பொருட்களை தயாரிப்பு முறைகளை காட்டினார்.இதன் மூலம் மக்களின் நம்பிக்கை அதிகரித்தது.

மேலும், பதஞ்சலி விளம்பர முறைகளையும் மாற்றியது. தொடக்கத்தில், நிறுவனம் தனது பொருட்களை மால் அல்லது பொதுவான கடைகளில் விற்கவில்லை, மாறாக "பதஞ்சலி ஸ்டோர்ஸ்" என்ற பெயரில் சிறப்பு கடைகளை திறந்தது. இந்த கடைகளில் ஆயுர்வேத மருத்துவர்கள் வேலை செய்து, மக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகளை செய்து, அவர்களுக்கு ஆயுர்வேத சிகிச்சைகளை பரிந்துரைத்தனர்.

இந்திய உற்பத்திகளுக்கு நவீனமான தோற்றம் கொடுத்த பதஞ்சலி 

முந்தைய காலங்களில், மக்கள் மூலிகை பொருட்களை எப்படி பயன்படுத்துவது, எப்படி மருந்தாக தயாரிப்பது என பயன்படுத்தாமல் இருந்தன. ஆனால் பதஞ்சலி, மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் அவற்றை ரெடி-டூ-டிரிங்  ஜூஸ் வகைகளாக மாற்றி வெளியிட்டது. இதனால் மக்கள் ஆயுர்வேத பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்க ஆரம்பித்தது. 

அப்படி மட்டும் இல்லாமல், அஷ்வகந்தா மற்றும் திரிபலா போன்ற ஆயுர்வேத மூலிகைகளை பொடியாக மட்டும் இல்லாமல், நவீன முறையில் டேப்லெட் என மாற்றி அறிமுகப்படுத்தியது. இதனால் மக்கள் அவற்றை எளிதாக பயன்படுத்த உதவியதால் கூடுதலாக பலனளித்தது. கோவிட்-19 காலத்தில் பதஞ்சலி இம்யூனிட்டி புஷ் பொருட்களை வெளியிட்டது. இதனால் மக்கள் ஆயுர்வேதத்தில் மேலும் நம்பிக்கை வைக்கத் தொடங்கினர்.

யோகம் மற்றும் ஆயுர்வேதத்தை மக்கள் எவ்வாறு விரைவாக ஏற்றுக் கொண்டனர்?

பாபா ராமதேவ் முன்னதாகவே ஒரு பிரபலமான யோக கலை குரு ஆவார். அவரது பெயர் பதஞ்சலி உடன் தொடர்புடையதால், மக்கள் யோகத்தை எளிதாக ஏற்றுக்கொண்டனர். யோகத்தின் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பலன்களை மக்கள் நன்றாக அறிந்திருந்தனர்.  அதே வகையில், பாபா ராமதேவ் பதஞ்சலியின் மூலம் ஆயுர்வேதத்தை யோகத்திற்கு இணைத்து மக்களுக்கு பிரகடனம் செய்தார். இதன் மூலம் மக்கள் நம்பிக்கை வைத்தனர். இதனால் யோகம் மற்றும் ஆயுர்வேதம் உடன் சேர்ந்து தங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும் என்று எண்ணினர். அவர்கள் இவற்றை தங்களது வாழ்க்கையில் அதிகம் சேர்த்துக் கொண்டனர்.

இந்தியா மட்டும்மல்ல உலகம் முழுவதும் மக்கள் யோகம் மற்றும் ஆயுர்வேதத்திற்கு அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினர். 21 ஜூன் அன்று உலகயோகம் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் உலகளாவிய அளவில் இதற்கான மதிப்பு பெற்றது. அனைத்து நாடுகளிலும் யோகாவைப் பற்றிய பெரிய நிகழ்வுகள் துவக்கப்பட்டன, இதன் மூலம் உலக அளவில் மக்கள் யோகம் மற்றும் ஆயுர்வேதத்தை நோக்கி விரைந்தனர்.

பதஞ்சலி தனது ஆயுர்வேத மற்றும் யோக மூலம் பாரம்பரிய முறைகளை புதிய காலத்திற்கு கொண்டுவந்து மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நல்ல வாழ்க்கை முறையை உருவாக்கியுள்ளது

மேலும் படிக்க | பதஞ்சலியின் ஆயுர்வேத ஆயுதங்கள் தினமும் நமது உடல் ஆரோக்கியத்தை இயற்கையாக மேம்படுத்துவது எப்படி?

மேலும் படிக்க | Patanjali Yoga: லட்சக்கணக்கானோர் பதஞ்சலி யோகாவை நோக்கி வருவது ஏன்...?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News