சர்க்கரை அளவை சுலபமாய் குறைக்கும் பாகற்காய் சாறு: இப்படி குடித்தால் போதும்

Diabetes Control Tips: பல எளிய, இயற்கையான வைத்தியங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். அவற்றில் ஒன்று பாகற்காய் சாறு. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 10, 2025, 02:25 PM IST
  • பாகற்காய் சாற்றின் நன்மைகள்.
  • இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
  • எடை இழப்பில் பயனுள்ளதாக இருக்கும்.
சர்க்கரை அளவை சுலபமாய் குறைக்கும் பாகற்காய் சாறு: இப்படி குடித்தால் போதும்

Bitter Gourd for Diabetes Control: இன்றைய காலகட்டத்தில், மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால், நீரிழிவு நோய் மிகவும் கடுமையான உடல்நலப் பிரச்சினையாக மாறி வருகிறது. இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயில், உடலின் இரத்த சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.

Add Zee News as a Preferred Source

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தாவிட்டால், இதய நோய், சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் பார்வைக் குறைபாடு போன்ற பல கடுமையான பிரச்சினைகள் ஏற்படலாம். பல எளிய, இயற்கையான வைத்தியங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். அவற்றில் ஒன்று பாகற்காய் சாறு. 

பாகற்காய் சுவையில் கசப்பாக இருக்கலாம், ஆனால் இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு. பாகற்காய் சாறு மிகவும் உதவியாக இருக்கும். இது இரத்த சர்க்கரை அளவை குறைப்பதோடு இன்னும் பல வித ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றது.

பாகற்காய் சாற்றின் நன்மைகள்

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்

நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் சாறு ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகின்றது. இதில் சரண்டின் மற்றும் பாலிபெப்டைட்-பி போன்ற ஆக்டிவ் சேர்மங்கள் உள்ளன. அவை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன. இது உடலில் இன்சுலின் போல செயல்பட்டு குளுக்கோஸை உறிஞ்சுவதைக் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது.

எடை இழப்பில் பயனுள்ளதாக இருக்கும்

எடையை இழக்க முயற்சிக்கும் நபர்களுக்கு பாகற்காய் சாறு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இது மிகக் குறைந்த கலோரிகளையும், அதிக நார்ச்சத்தையும் கொண்டுள்ளது. இதை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வு கிடைக்கும். இதனால், ஆரோக்கியமற்ற, தேவையற்ற உணவுகளை உட்கொள்வது  தவிர்க்கப்படுகின்றது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

செரிமானத்தை சீராக வைத்திருக்கும்

பாகற்காய் சாறு செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது செரிமான நொதிகளை செயல்படுத்துகிறது, இது உணவை எளிதில் ஜீரணிக்க உதவி, மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் பிற செரிமான பிரச்சனைகளைப் போக்கவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது

பாகற்காய் சாற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இது உடல் தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. 

சருமத்திற்கு நன்மை பயக்கும்

பாகற்காய் சாறு சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. இதனால், பருக்கள் மற்றும் பிற தோல் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். இதில் உள்ள ஆண்டிஆக்சிடெண்டுகள் சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாத்து சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாற்றுகின்றன.

உடலில் உள்ள நச்சுகளை நீக்கும்

பாகற்காய் சாறு உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்து அதன் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. இதை தினமும் உட்கொள்வதன் மூலம், உடல் உள்ளிருந்து சுத்தப்படுத்தப்பட்டு, ஆற்றல் அதிகரிக்கும். 

கண் ஆரோக்கியத்திற்கு நல்லது

பாகற்காய் பீட்டா கரோட்டின் மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது கண்புரை மற்றும் மாகுலர் சிதைவு போன்ற வயது தொடர்பான கண் பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்க உதவும். 

பாகற்காய் சாறு செய்வது எப்படி?

பாகற்காய் சாறு தயாரிக்க, முதலில் ஒன்று அல்லது இரண்டு பாகற்காய்களைக் கழுவி நறுக்கி, விதைகளை நீக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். சாற்றை வடிகட்டி உடனடியாக குடிக்கவும். நீங்கள் விரும்பினால், அதன் கசப்பைக் குறைக்க எலுமிச்சை சாறு அல்லது தேனையும் சேர்க்கலாம். இருப்பினும், அதிகபட்ச நன்மைகளைப் பெற, எதனுடனும் கலக்காமல் குடிப்பது நல்லது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மாரடைப்பு அபாயத்தை குறைக்க உதவும்... இதயத்திற்கு இதமான சில சமையல் எண்ணெய்கள்

மேலும் படிக்க | வேப்பிலை சாப்பிடுவதால் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியுமா? முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News