)
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், இரவு வெகுநேரம் வரை விழித்திருப்பது ஒரு சாதாரண விஷயமாகிவிட்டது. பலருக்கு மொபைல் போன்களில் ஸ்க்ரோல் செய்து கொண்டே நேரத்தை கழிக்கின்றனர். இதனால் தூங்குவதற்கு நள்ளிரவு ஆகிவிடுகிறது. சிலர் அதை "எனக்கான நேரம்" என்று அழைக்கிறார்கள். அன்றைய களைப்பிற்குப் பிறகு அவர்கள் தங்களுக்காக நேரம் ஒதுக்க இரவு நேரத்தை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், இந்தப் பழக்கம் உங்கள் உடல்நலத்திற்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இரவு தூக்கம் உடலுக்கும் மூளைக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும் ஒரு மருந்தைப் போல வேலை செய்கிறது. நீங்கள் அதைப் புறக்கணித்தால், வரும் காலங்களில், பல உடல் நல பிரச்சனைகளையும் (Health Tips) எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இரவு வெகுநேரம் வரை விழித்திருப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்
இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால், குடல் இரப்பை பிரச்சனைகள் மிகவும் அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தூக்கத்திற்கும் வாயு, வலி, வயிற்றில் வீக்கம் போன்ற ஜீரணம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. அடிக்கடி கழிப்பறைக்குச் செல்வது போன்ற பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரிடும்.
அஜீரணம் தொடர்பான பிரச்சினைகள்
அஜீரணம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு, தூக்கம் மிகவும் முக்கியமானது. அத்தகையவர்கள் தினமும் குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். நீங்கள் குடல் நோய் அல்லது அஜீரணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு சரியான தூக்கம் வரவில்லை என்றால், உங்கள் நிலை மோசமடையக்கூடும். தூக்கமின்மை காரணமாக செரிமானம் மற்றும் வயிற்று பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும்.
மூளை ஆரோக்கியத்தை பாதிக்கும் தூக்கமின்மை பிரச்சனை
ஒவ்வொரு நபரும் போதுமான அளவு தூங்க வேண்டும். நாம் சரியாக தூங்காதபோது மூளை சோர்வாக உணர்கிறது. அத்தகைய சூழ்நிலையில், முடிவுகளை எடுக்கும் சக்தி குறைகிறது. மனநிலை மோசமாக இருக்கும், உடல் நாள் முழுவதும் சோம்பலாக இருக்கும். பலர் "இது இப்போது ஒரு பழக்கமாகிவிட்டது" என்று நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் இந்தப் பழக்கம் உங்கள் ஆரோக்கியத்தை மெதுவாகக் கெடுத்து வருகிறது. குறிப்பாக இரவு வரை சமூக ஊடகங்களில் ஆக்டிவ் ஆக இருப்பவர்கள் தங்கள் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்
தூக்கமின்மை பிரச்சனை தீர செய்ய வேண்டியது என்ன?
1. தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள்.
2. இரவில் தூங்குவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பு உங்கள் மொபைல் மற்றும் மடிக்கணினியை அணைத்து விடுங்கள்.
3. தூக்கத்தைக் கெடுக்கும் தேநீர், காபி போன்றவற்றைத் தவிர்க்கவும்.
4. இரவில் லேசான உணவை உண்ணுங்கள், அதிகமாக சாப்பிட வேண்டாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ