ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒருமுறை அலாரம் வைப்பவரா நீங்கள்? இத தெரிஞ்சுக்கோங்க!

காலையில் விடாமுயற்சியுடன் சீக்கிரம் எழுவது தூக்கத்தின் தரத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும், மேலும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும்.

Written by - RK Spark | Last Updated : Apr 14, 2025, 12:41 PM IST
  • பலமுறை அலாரம் வைப்பவரா நீங்கள்?
  • இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்.
  • மருத்துவர்கள் சொல்லும் அறிவுரை.
ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒருமுறை அலாரம் வைப்பவரா நீங்கள்? இத தெரிஞ்சுக்கோங்க!

அதிகாலையில் எழுந்திருப்பதன் மூலம் ஒரு நாளில் கூடுதல் நேரத்தைக் கொண்டிருப்பதைத் தாண்டி பல்வேறு நன்மைகள் உள்ளது. அதிகாலையில் எழுவது தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அதிகாலையில் எழுபவர்கள் தங்கள் நாளில் அதிக கட்டுப்பாட்டை உணர்கிறார்கள். உடற்பயிற்சி செய்வதாக இருந்தாலும், தியானம் செய்வதாக இருந்தாலும் அல்லது அமைதியான ஒரு கப் காபியை ரசிப்பதாக இருந்தாலும் சரி, இந்த தனிமையின் தருணங்கள் அதிகாலையில் எழுவதால் கிடைக்கும். காலையில் சீக்கிரம் எழுந்திருப்பவர்கள் அதிக செயல்திறன் மிக்கவர்களாகவும், தங்கள் இலக்குகளை அடைபவர்களாகவும் இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | சாப்பாட்டில் கவனமாக இருந்து... 12 வாரங்களில் கொழுப்பை குறைத்த பெண்!

இருப்பினும், இந்த வாழ்க்கை முறை மாற்றத்தை உருவாக்குவது ஒரே இரவில் நடக்காது. அதற்கு அர்ப்பணிப்பு மற்றும் சரியான தூக்கம் தேவை. தற்போது அனைவரும் இரவில் தாமதமாக தூங்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர். அதிகப்படியான திரை நேரம், காஃபின் நுகர்வு மற்றும் ஒழுங்கற்ற உணவு முறைகள் போன்ற காரணிகள் அனைத்தும் மோசமான தூக்கத்தின் தரத்திற்கு பங்களிக்கும். இதை சரி செய்ய, தனிநபர்கள் ஓய்வை அதிகரித்து சரியான தூக்க நேர வழக்கத்தை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். புத்தகம் படிப்பது, மென்மையான யோகா பயிற்சி செய்வது அல்லது அமைதியான இசையைக் கேட்பது போன்ற செயல்பாடுகள் இதில் அடங்கும், இது மூளைக்கு அமைதியை கொடுத்து தூக்கத்தை அதிகப்படுத்தும்.

மேலும், ஒருவர் தூங்கும் சூழல் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு இருண்ட, குளிர் மற்றும் அமைதியான அறை தடையற்ற தூக்கத்தின் வாய்ப்பை கணிசமாக அதிகரிக்கும். வசதியான படுக்கையை தயார் செய்வது, இரைச்சல் இடையூறுகளைக் குறைப்பது நிம்மதியான தூக்கத்திற்கு உகந்த சூழலை வளர்க்கும். ஒரு சிறந்த தூக்க சரணாலயத்தை உருவாக்குவதன் மூலம், தனிநபர்கள் புத்துணர்ச்சியுடன் எழுந்திருப்பதையும், ஒரு நாளைச் சமாளிக்கத் தயாராக இருப்பதையும் உறுதிசெய்ய முடியும்.

காலையில் வைக்கும் அலாரம்

பலருக்கும் மொபைலில் வைக்கும் அலாரம் சத்தம் கேட்பதில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதன் காரணமாக பலருக்கும் இந்த சத்தம் கேட்பதில்லை. இதனால் தாமதமாக எழுந்திருப்பது அன்றைய நாளையே மோசமாக பாதிக்கும். இதனை தவிர்க்க பலரும் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு முறை அலாரம் வைக்கின்றனர். இதன் மூலம் சரியான நேரத்தில் எழுந்திருக்க முடியும் என்று நம்புகின்றனர். ஆனால் இப்படி பத்து நிமிடத்திற்கு ஒருமுறை அலாரம் வைப்பது உடலுக்கு பல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. தூக்கத்திலிருந்து மீண்டும் மீண்டும் எழுந்திருப்பது ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லதல்ல.

ஆராய்ச்சிகளின் படி இப்படி தூக்கத்திலிருந்து எழுந்திருப்பது உங்களின் தூக்கத்தின் தரத்தை மோசமாக பாதிக்கும். மேலும் கண்கள் மற்றும் இதய பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. காலையில் தூங்கி தூங்கி எழுந்திருப்பது அன்றைய நாள் முழுவதும் சோம்பல், சோர்வு, மனநிலை மாற்றங்கள் போன்றவற்றை ஏற்படுத்தும். இதனால் மன அழுத்தங்கள் அதிகமாக ஏற்பட்டு மூளை செயல்பாடு, இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இரவு சீக்கிரம் தூங்கி அதிகாலை எழுவது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். இரவில் குறைந்தது 8 மணி நேரமாவது தூங்குவது உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கெட்ட கொழுப்பை இயற்கையான வழியில் காலி செய்யும் டாப் 9 உணவுகள்: லிஸ்ட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News