)
இந்தியா நீரிழிவு நோயின் தலைநகரம் எனப்படுகிறது. ஏனெனில், இங்கு சுமார் 7.29 கோடி பேருக்கு சர்க்கரை நோய் உள்ளது. இந்த எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டில் 9.8 கோடியை எட்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இரண்டு வகையான நீரிழிவு நோய்கள் உள்ளன. டைப் 1 மற்றும் டைப் 2. டைப்-1 என்பது உடல் இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாத ஒரு நிலை. உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு தவறுதலாக கணையத்தில் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களைத் தாக்குவதால் இந்த நிலை ஏற்படுகிறது. டைப்-2 என்பது இன்சுலினை சரியாக பயன்படுத்த முடியாத நிலை அல்லது போதுமான அளவு இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஆகும். இது நீரிழிவு நோயின் மிகவும் பொதுவான வகையாகும்.
இளைஞர்களிடையே சர்க்கரை நோய் அதிகரிப்பதற்கு அவர்களின் மோசமான வாழ்க்கை முறை ஒரு முக்கிய காரணம். 25-30 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட காரணம் அவர்களின் முறையற்ற உணவுப் பழக்கம். மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் துரித உணவு உண்ணுதல் போன்ற கெட்ட பழக்கங்கள் இதில் அடங்கும். நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படாவிட்டால், கண் பார்வை இழப்பு, சிறுநீரக செயலிழப்பு, இதய நோய் உள்ளிட்ட பிற கடுமையான நிலைமைகளை ஏற்படுத்தும். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், இங்கே குறிப்பிட்டுள்ள 5 பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும். இதனால் இரத்த சர்க்கரை அளவு எப்போதும் கட்டுக்குள் இருக்கும்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சில ஆரோக்கியமான பழக்கங்கள்
1. ஒரு வாரத்தில் குறைந்தது 2000 கலோரிகளை எரிக்கவும்.
உடற்பயிற்சி செல்களின் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. மிதமான உடற்பயிற்சி இன்சுலின் உணர்திறனை 51% அதிகரிக்கிறது. மேலும் அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சி அதை 85% அதிகரிக்கிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, ஒவ்வொரு வாரமும் 2000 கலோரிகளை எரிக்கக்கூடிய உடற்பயிற்சியைச் செய்யுங்கள். உதாரணமாக- 5 நாட்கள் 40 முதல் 45 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் மற்றும் ஏரோபிக்ஸ் போன்றவற்றை கடைபிடிக்கலாம்
2. துரித உணவுகளை தவிர்ப்பது அவசியம்
வேகமாக ஜீரணமாகும் கார்போஹைட்ரேட்டுகளை அதிகமாக கொண்ட உணவுகலை உட்கொள்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 40% அதிகம் என்பது பல ஆய்வுகளில் தெளிவாகத் தெரிந்த ஒரு விஷயம் . இது இன்சுலின் உற்பத்தி செய்யும் திறனைக் குறைக்கிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. எனவே மைதா மாவில் இருந்து தயாரிக்கப்படும் துரித உணவுப் பொருட்களான வெள்ளை ரொட்டி, பாஸ்தா போன்றவை ஊட்டச்சத்துக்கள் இல்லாதவை. அதில் இருப்பது கார்போஹைட்ரேட்டுகளும் கலோரியும் மட்டுமே. எனவே அத்தகைய பொருட்களை வாரத்திற்கு ஒரு முறைக்கு மேல் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
3. தினமும் 25 கிராம் நார்ச்சத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
வயது வந்தவர்கள் தினமும் தங்கள் உணவில் 25 கிராம் நார்ச்சத்து சேர்க்க வேண்டும். இதற்கு, நீங்கள் பச்சை பட்டாணி, முழு தானியங்கள், சியா விதைகள் ஆப்பிள் மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை சாப்பிடலாம். அதிக நார்ச்சத்து உட்கொள்வது குடல் ஆரோக்கியத்தை நல்ல நிலையில் பராமரிக்கவும், எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. நமது செரிமான அமைப்பில், நார்ச்சத்தும் தண்ணீரும் இணைந்து ஒரு ஜெல்லை உருவாக்குகின்றன. இது உணவை ஜீரணிக்க உதவுகிறது.
4. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5-7 நிமிடங்கள் நடக்கும் பழக்கம்
தினமும் நீண்ட நேரம் தொடர்ந்து உட்கார்ந்திருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 91% அதிகரிப்பதாக மருத்துவ ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியின்படி, தொடர்ந்து ஒரு மணி நேரம் திரையின் முன் அமர்ந்திருப்பது அவர்களுக்கு நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் நடப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
5. வைட்டமின் டி குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோயை நிர்வகிக்க, உடலில் வைட்டமின் டி இருப்பதும் முக்கியம். வைட்டமின் டி டைப்-2 நீரிழிவு நோயின் அபாயத்தை 43% குறைக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். வைட்டமின் டி சூரிய ஒளியிலிருந்து பெறப்படுகிறது. நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை குறைந்தது 30 நிமிடங்கள் வெயிலில் உட்காரலாம். இது தவிர, கொழுப்பு நிறைந்த மீன், தயிர் மற்றும் ஆரஞ்சு சாறு ஆகியவை வைட்டமின் டி ஊட்டச்சத்தின் இயற்கை ஆதாரங்களில் அடங்கும்.
6. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சில பானங்கள்
தினமும் டீ காபிக்கு பதிலாக ஆரோக்கிய பானங்களை அருந்துவது பலன் தரும். பிளாக் காபி குடிப்பதால் டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 8% குறைகிறது.கிரீன் டீயில் எபிகல்லோகேடசின் கேலேட் எனப்படும் ஆக்ஸிஜனேற்றி உள்ளது. இது இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்க உதவுகிறது. இது தவிர மெட்டபாலிஸத்தை தூண்டி செரிமானத்தை மேம்படுத்தும், சீரக நீர், இலவங்கபட்டை ஆகியவையும் பலன் தரும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ