Pumpkin Seeds for Diabetes : உலகளவில் நீரிழிவு நோய் அதிகமாக பரவி வரும் நாடாக இந்தியா இருக்கிறது. வீட்டில் ஒருவருக்கு கட்டாயம் நீரிழிவு நோய் இருப்பது அல்லது வருவது என்பது உறுதியாகிவிட்டது. இந்த மோசமான மாற்றத்துக்கு காரணம் வாழ்க்கைமுறை மற்றும் உணவு முறையே ஆகும். அத்துடன் வேறு வலுவான காரணங்கள் எதையும் மருத்துவ உலகம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. நீரிழிவு நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால் வரும் முன் காப்பதே சிறந்தது. இல்லையென்றால் வாழ்நாள் முழுவதும் அதனுடன் போராட வேண்டியிருக்கும்.
இந்த சூழலில் நீரிழிவு நோயாளிகளுக்கான முக்கிய அட்வைஸ் ஒன்றை அப்போலோ மருத்துவர் கூறியுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையின் முதன்மை ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் பிரியங்கா ரோக்டகி கூறுகையில், உயர் நார்ச்சத்து, குறைந்த கார்போஹைட்ரேட், மக்னீசியம் மற்றும் துத்தநாகம் நிறைந்த பூசணிக்காய் விதைகள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
நீரிழிவு (டயாபெடிஸ்) என்றால் என்ன?
நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட நோய், இதில் கணையம் (பேன்கிரியாஸ்) போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாது. இன்சுலின் குறைவாக இருந்தால், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
நீரிழிவு நோய் அறிகுறிகள்:
அடிக்கடி தாகம் மற்றும் சிறுநீர் கழித்தல், அதிக பசி, காயங்கள் ஆற தாமதமாகும், பார்வை பலவீனம். நீரிழிவு நீண்டகாலம் கட்டுப்படுத்தப்படாவிட்டால், இதய நோய், சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் நரம்பு சேதம் ஏற்படலாம்.
பூசணிக்காய் விதைகள் எப்படி நீரிழிவை கட்டுப்படுத்துகின்றன?
உயர் நார்ச்சத்து: இரத்த சர்க்கரையை மெதுவாக உயர்த்துகிறது.
குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் (GI ~15): சர்க்கரை ஸ்பைக்குகளை தடுக்கிறது.
மக்னீசியம்: இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள்: உடல் அழற்சியை குறைக்கிறது.
ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள்: இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
எப்படி சாப்பிடலாம்?
வறுத்து பொடியாக்கி தினமும் 1-2 ஸ்பூன் சேர்த்து சாப்பிடலாம்.
சாலட், ஸ்மூதி அல்லது தயிரில் தூவி சாப்பிடலாம்.
மாவு சேர்த்து ரொட்டி/தோசையில் பயன்படுத்தலாம்.
கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் பூசணி விதைகளை அதிகம் சாப்பிட்டால் கலோரி அதிகரிக்கும், எனவே ஒரு நாளைக்கு 30 கிராமுக்கு மேல் எடுத்துக் கொள்ளக்கூடாது.
கூடுதல் நீரிழிவு எதிர்ப்பு உணவுகள்:
வெந்தையக் கீரை: இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.
உளுந்து: புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம்.
நார்த்தங்காய், எலுமிச்சை: வைட்டமின் C மற்றும் நார்ச்சத்து.
நீரிழிவு நோயாளிகள் தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்து, சீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது).
மேலும் படிக்க | கோடையில் யூரிக் அமில பிரச்சனைக்கு முடிவு கட்ட இதை மட்டும் செய்யுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









