)
Heart Health Tips: கடந்த சில ஆண்டுகளாக இதய நோய் மற்றும் மாரடைப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு பழக்கம் ஆகியவை முக்கிய காரணமாக உள்ளது நாம் அனைவரும் அறிந்தது. நமது ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களால் உடல் பருமன் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரித்து, மாரடைப்பு அபாயம் பல மடங்கு அதிகரிக்கிறது.
போக்குவரத்து இரைச்சலுக்கு மாரடைப்புக்கும் இடையே உள்ள தொடர்பு
ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள் மாரடைப்பு அபாயத்தை அதிகரிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் வேறு பல காரணங்களும் உள்ளதாக ஆய்வுகள் மூலம் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் சர்குலேஷன் ரிசர்ச் இதழில், வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவில், போக்குவரத்து இரைச்சலுக்கு மாரடைப்புக்கும் இடையே தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கொண்ட ஆய்வு
பல்வேறு நோய்களுக்கான ஆபத்து காரணிகளை கண்டறிய அமைக்கப்பட்ட சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு, அதிக அளவிலான தரவுகளை ஆய்வு செய்து இந்த முடிவை அழியட்டும் உள்ளது. ஆய்வு முடிவுகள், போக்குவரத்து இரைச்சலுக்கும், பக்கவாதம் மட்டுமல்லாது, நீரிழிவு போன்ற நோய்களுக்கும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது என கூறுகின்றன.
போக்குவரத்து இரைச்சல் மூலம் அதிகரிக்கும் இதய நோய் அபாயங்கள்
சாலை போக்குவரத்து சத்தம், அதிகரிப்பதால், ஒவ்வொரு 10 டெசிபல் உயர்வுக்கும் இதய நோய் அபாயம் 3.2% அதிகரிப்பதாக ஆய்வு கண்டறிந்துள்ளது. அதோடு இரவில் போக்குவரத்து சத்தம், தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. தூக்கமின்மை மன அழுத்த ஹார்மோன்களின் அளவை அதிகரித்து, உடலில் வீக்கத்தை ஏற்படுத்தி, ரத்த நாளங்கள் தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
சத்தத்தை குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
போக்குவரத்து இறைச்சூழலை குறைக்க, உள்ளூர் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு பரிந்துரைத்துள்ளது. பரபரப்பான சாலைகளில் குறிப்பாக, குளிர்பு பகுதிகளில் ஒளி தடைகளை அமைப்பது, சத்த அளவை 10 டிசவல் வரை குறைக்க கூடும் என்றும் ஆய்வு கூறியுள்ளது. சாலைகளை கட்டமைக்கும் போது, இரைச்சலை கட்டுப்படுத்த உதவும் பொருட்களை பயன்படுத்தி அதன் மூலம், மூன்று முதல் நான்கு டெசிபல் வரை சப்தத்தை குறைக்கலாம் என கூறப்படுகிறது.
தனி நபர்களாக மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள்
அரசை தவிர தனிமம் அவர்களுக்கும் பொறுப்புகள் உள்ளன. அருகில் உள்ள இடங்களுக்கு சைக்கிள் களை பயன்படுத்துவதன் மூலம், உடல் நலமும் சிறப்பாக இருக்கும். சாலையில் போக்குவரத்து நெரிசலும் இரைச்சலும் குறையும். முடிந்த அளவு பொது போக்குவரத்தை பயன்படுத்துவதால், சாலையில் போக்குவரத்து நெரிசல் நன்றாக குறையும். அதோடு தேவையில்லாத இடத்தில் ஹாரன் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ