உலகளவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க காலை வேளையில் குடிக்க வேண்டிய பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
காலை வேளையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடிப்பது நீரிழிவு நோயை பெருமளவில் கட்டுக்குள் வைக்கும்.
வைட்டமின் சி அதிகம் உள்ள நெல்லிக்காய் சாறு இரத்த சர்க்கரை அளவை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும்.
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க கற்றாழை சாறு மிக உதவியாக இருக்கும். எனினும் இதை முதலில் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.
இரவு முழுவதும் வெந்தய நீரை ஊற வைத்து காலையில் அந்த நீரை பருகி வந்தால், நீரிழிவு நோயாளிகள் இந்த நோயை கட்டுக்குள் வைக்கலாம்.
மஞ்சளில் உள்ள குர்குமின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
இலவங்கப்பட்டையில் காணப்படும் இயற்கையான கூறுகள் இரத்த க்ளூகோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.