ரத்த சோகை

ரத்த சோகை என்பது இரத்தத்தில் போதுமான சிவப்பு இரத்த அணுக்கள் இல்லாத ஒரு நிலை. ரத்த சிவப்பணுக்களில் காணப்படும் இரும்புச்சத்து நிறைந்த புரதமான ஹீமோகுளோபின் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது.

';

சோர்வு

உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல ஹீமோகுளோபின் தேவைப்படுகிறது. இரத்த சோகை இருந்தால், உடலுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் எப்போதும் சோர்வாக உணருவீர்கள்.

';

கீரை

இரத்த சோகைக்கு சிகிச்சையளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இரும்புச்சத்து இயற்கையாகவே கீரைகளுக்கு அதிகம் உண்டு. அதிலும், முருங்கை கீரை ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

';

பேரீச்சம்பழம்

இரும்பு மற்றும் வைட்டமின் சி கலவையை பேரீச்சம்பழத்தில் காணலாம். பேரீச்சம்பழங்களை காலையில் சாப்பிடுவது ஆற்றலைக் கொடுக்கும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும்.

';

பாதாம்

இரத்த சோகை தீர 4 முதல் 5 பாதாம் பருப்பை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதன் தோளை நீக்கிவிட்டு உண்ணுதல் மிகவும் நன்மை பயக்கும்.

';

பீட்ரூட்

பீட்ரூட்டைதொடர்ந்து 20 நாட்கள் சாப்பிட ஹீமோகுளோபின் அளவு குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும்

';

மாதுளை

மாதுளை இரத்த சிவப்பணுக்களை அதிகரித்து ரத்த சோகையை நீக்குகிறது.

';

தயிர்

இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க உங்கள் உணவில் தயிர் போன்ற புரோபயோடிக் நிறைந்த உணவுகளைச் சேர்க்கலாம்.

';

கருப்பு எள்

கருப்பு எள்ளில், இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், தாமிரம், துத்தநாகம், செலினியம், வைட்டமின்கள் பி6, ஈ மற்றும் ஃபோலேட் ஆகியவை நிறைந்துள்ளது.

';

VIEW ALL

Read Next Story