டிமென்ஷியா என்னும் மறதி நோய்... ஆரம்ப கால அறிகுறிகள் இவை தான்... அலட்சியம் வேண்டாம்!

உலகம் முழுவதும் டிமென்ஷியா என்னும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றன. இதுவரை இது மரணத்திற்கான ஏழாவது முக்கிய காரணமாக உள்ளது என தரவுகள் கூறுகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 6, 2025, 02:22 PM IST
  • மூளையில் ஏற்படும் பாதிப்பு அல்லது மூளையில் ஏற்படும் காயம் போன்றவற்றால் ஏற்படும் குறைபாடு.
  • டிமென்ஷியா அறிகுறிகள் 20 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றலாம்.
  • டிமென்ஷியா பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு மூளைக்கான ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருக்கும்.
டிமென்ஷியா என்னும் மறதி நோய்... ஆரம்ப கால அறிகுறிகள் இவை தான்... அலட்சியம் வேண்டாம்!

உலகம் முழுவதும் டிமென்ஷியா என்னும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றன. இதுவரை இது மரணத்திற்கான ஏழாவது முக்கிய காரணமாக உள்ளது என தரவுகள் கூறுகின்றன. இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மூளை தொடர்பான பிரச்சனையாகும். இதில் பாதிக்கப்பட்ட நபர் சிறிய விஷயங்களை மட்டுமல்ல முக்கியமான விஷயங்களை கூட  மறந்து விடுகிறார். இதில் தனது சொந்த பெயர், பிறந்த தேதி கூட மறவ்து விடுவார். கடுமையான நிலையில் உணவை மெல்லும் முறை ஆகியவை அடங்கும்.

டிமென்ஷியா என்றால் என்ன? 

டிமென்ஷியா என்பது, நரம்பு செல்களை சேதப்படுத்தி மூளை பாதிப்புக்கு வழிவகுக்கும் பல நோய்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு ஆகும். மூளையில் ஏற்படும் பாதிப்பு அல்லது மூளையில் ஏற்படும் காயம் போன்றவற்றால் ஏற்படும் குறைபாடு. இதனால் ஒரு நபரின் சிந்திக்கும் திறன் குறையத் தொடங்குகிறது. நோய்  தாக்குவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே அதன் அறிகுறிகள் (Health Tips) தோன்ற ஆரம்பிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

டிமென்ஷியா ஏற்படுத்தும் பாதிப்புகள்

டிமென்ஷியா பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு மூளைக்கான ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருக்கும்.  நமது சிந்தனைத் திறன், நினைவாற்றல் போன்றவற்றை பாதிக்கிறது. அல்சைமர் மற்றும் பக்கவாதம் ஆகிய பாதிப்புகளின் எதிரொலியாகவும் டிமென்ஷியா நோய் உண்டாகும்.

டிமென்ஷியா அறிகுறிகள் 20 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றலாம்

நினைவாற்றல் இழப்பு, குழப்பமான பேச்சு அல்லது வார்த்தைகளைக் கண்டுபிடிப்பதில் சிரமம், பகுத்தறிவு மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன் இழப்பு, சிக்கலான பணிகளைச் செய்வதிலும் திட்டமிடுவதிலும் சிரமம் ஆகியவை டிமென்ஷியாவின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.

டிமென்ஷியா தாக்கும் ஆபத்து அதிக உள்ளவர்கள் யார்?

டிமென்ஷியா ஏற்படும் ஆபத்து 65 வயதுடையவர்களுக்கு அதிகமாக உள்ளது. மேலும் வயது அதிகரிக்கும் போது ஆபத்தும் அதிகரிக்கிறது. 85 வயதிற்குள், பாதி பேர் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, இந்த நோய்க்கான காரணங்கள் புகைபிடித்தல், இதய நோய், மூளை காயம், குடும்ப வரலாறு, நீரிழிவு நோய், தூக்கத்தில் மூச்சுத்திணறல் மற்றும் மோசமான வாழ்க்கை முறை.

டிமென்ஷியாவுக்கு என்ன சிகிச்சை?

டிமென்ஷியாவுக்கு குறிப்பிட்ட மருத்துவம் அல்லது சிகிச்சை எதுவும் தற்போது வரை இல்லை என்றாலும், இந்த நோய் பாதிக்காமல் தடுக்கவும், தீவிரத்தன்மை அடையாமல் கட்டுப்படுத்தவும் சிகிச்சைகள் உள்ளன. நோயறிதலுக்குப் பிறகு, மருத்துவர்கள் மருந்து மற்றும் சிகிச்சை மூலம் அதன் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | மூட்டு வலி முதல் கொலஸ்ட்ரால் வரை.... நோயற்ற வாழ்வுக்கு உதவும் ஓமம்

மேலும் படிக்க | எச்சரிக்கை... மூளையை சல்லடையாய் துளைக்கும்... சில ஆபத்தான உணவுகள் - பழக்கங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News