Crime News: 16 வயது பள்ளி மாணவனிடம் ஓராண்டில் பலமுறை பாலியல் ரீதியாக அத்துமீறிய 40 வயது பெண் ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Crime News In Tamil: மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. மும்பையில் உள்ள முன்னணி பள்ளி ஒன்றின் 40 வயதான பெண் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அவர் பள்ளியில் படிக்கும் 16 வயது சிறுவனிடம் கடந்த ஓராண்டில் பலமுறை பாலியல் ரீதியாக அத்துமீறியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து போலீசார் அந்த பெண் ஆசிரியையை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விரிவாக காணலாம்.
Crime News: 16 வயது மாணவனிடம் அத்துமீறல்
40 வயதான அந்த ஆசிரியைக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். தற்போது சிறுவனிடம் பலமுறை பாலியல் ரீதியாக அத்துமீறிய வழக்கில் அவர் போக்சோ சட்டத்தின் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தற்போது வரை இந்த விவகாரம் குறித்து அந்த முன்னணி பள்ளி தரப்பில் இருந்து எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
அந்த பெண் ஆசிரியை மாணவர்களுக்கு ஆங்கில பாடத்தைக் கற்றுக்கொடுக்கக் கூடியவர் என்றும் தற்போது இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவன் இந்த ஆசிரியையிடம் 11ஆம் வகுப்பில் படித்துள்ளான் என்றும் போலீசார் தரப்பில் தகவல்கள் கிடைக்கின்றன. மேலும், அந்த ஆசிரியை போலீசாரிடம் கூறுகையில், கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பள்ளி ஆண்டுவிழாவுக்கு நடனக்குழுவை ஒருங்கிணைக்கும்போது பல சந்தர்ப்பங்களில் அந்த சிறுவனை நோக்கி தான் ஈர்க்கப்பட்டதாகவும், 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாலியல் ரீதியான நகர்வுகளை தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.
Crime News: தூது சென்ற தோழியும் சிக்கினார்
பாதிக்கப்பட்ட மாணவன் ஆரம்பத்தில் தயங்கி அந்த பெண் ஆசிரியையை தவிர்க்க ஆரம்பித்திருக்கிறான். உடனே அந்த ஆசிரியை தனது தோழியை உதவிக்கு அணுகி உள்ளார். ஆசிரியையின் தோழி அந்த பள்ளியைச் சேர்ந்தவர் இல்லை. அந்த தோழிதான் சிறுவனிடம் சென்று, இந்த காலத்தில் வயதானவர்களும் - இளையவர்களும் உறவில் இருப்பது இயல்பாகிவிட்டது என்றும் 'நீயும் அவளும் made for each other' என்றும் கூறி மனமாற்றம் செய்துள்ளார். தற்போது ஆசிரியையின் தோழி மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் ஆசிரியையை தவிர்த்து வந்த அந்த சிறுவனும் அதற்கு பிறகே ஆசிரியையை சந்தித்துள்ளான். பின்னர் அந்த ஆசிரியை சிறுவனை ஒரு காரில் ஏற்றிக்கொண்டு ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்றாராம். இவை அனைத்தையும் அடையாளத்தை வெளிக்காட்ட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
Crime News: மன ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவன்
மேலும் அவர் கூறுகையில், "ஆசிரியை அந்த சிறுவினின் ஆடைகளை வலுக்கட்டாயமாக அவிழ்த்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அடுத்த சில நாட்களில் மாணவன் மன ரீதியாக பாதிக்கப்பட்டு பதட்டமாக உணரத் தொடங்கி உள்ளான். அதற்கும், அவள் அவனுக்கு சில பதட்ட எதிர்ப்பு மாத்திரைகளை (Anti-depressant Tablets) கொடுத்தாள்," என்று அந்த அதிகாரி கூறினார். அந்த ஆசிரியையின் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Crime News: மாணவனுக்கு மது ஊற்றிக்கொடுத்த ஆசிரியை
மேலும் இந்த வழக்கு குறித்து மற்றொரு அதிகாரி கூறுகையில், ஆசிரியை தெற்கு மும்பையில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று, அங்கு அவரை பாலியல் உறவுக்கு வற்புறுத்தி இணங்கவைத்துள்ளார். அதற்கு முன் மாணவனை மது அருந்தவும் வைத்திருக்கிறார். இதில் தொடர்ந்து மாணவனின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாணவனின் நடத்தை மாற்றத்தை கவனித்து பெற்றோர் அவனிடம் கேட்கவே உண்மை சொல்லியிருக்கிறான்.
Crime News: வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?
இருப்பினும் பெற்றோர் அப்போதே அதை காவல்துறைக்கு கொண்டுவரவில்லை. இன்னும் கொஞ்ச நாள்களில் தங்களின் பையனை பள்ளிப் படிப்பை முடித்துவிடுவார் என்பதாலும், அதற்கு பின் ஆசிரியர் அவனை தொந்தரவு செய்வதை நிறுத்திவிடுவார் என்றும் நினைத்து இதை ரகசியமாகவே வைத்துள்ளனர்.
இருப்பினும், இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாணவன் பள்ளியை நிறைவு செய்துள்ளான். அதன்பிறகு, மீண்டும் ஆசிரியர் அவனைத் தொடர்பு கொண்டிருக்கிறார். மேலும், ஆசிரியை அந்த மாணவனின் வீட்டு ஊழியர்களில் ஒருவரின் மூலம் மாணவனை தொடர்புகொண்டிருக்கிறார், மேலும் தன்னை சந்திக்க வரும்படி மாணவனை ஆசிரியை அழைத்துள்ளார். அதன்பிறகே, பெற்றோர் போலீசாரிடம் சென்று புகார் அளித்துள்ளனர். போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைதாகி உள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ