)
Ahmedabad Plane Crash Black Box: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி ஏர் இந்தியா நிறுவனத்தின் AI 171, Boeing Dreamliner 787 விமானம், சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 5 நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அகமதாபாத்தில் உள்ள பிஜே மருத்துவ கல்லூரியின் ஹாஸ்டலில் விமானம் மோதி வெடித்து சிதறியது.
Ahmedabad Plane Crash: 265 பேர் உயிரிழப்பு
விமானத்தில் இருந்து 242 பேரில் 241 பேரும் உயிரிழந்தனர். மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் உள்பட மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 265 என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் உயிரிழப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்தவில்லை. விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார், மற்ற பயணிகள், விமானிகள், பயணியாளர்கள் உள்பட 241 பேரும் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியது.
Ahmedabad Plane Crash: பிளாக் பாக்ஸ் கண்டுபிடிப்பு
இந்நிலையில், ஏர் இந்தியா AI171, Boeing Dreamliner 787 விமானத்தின் பிளாக் பாக்ஸ், தற்போது கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் அந்த பிளாக் பாக்ஸ் விமானத்தின் வால் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். இது விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு பேருதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
Ahmedabad Plane Crash: விமான விபத்து விசாரணையில் அடுத்தது என்ன?
விமான விபத்து புலனாய்வு பணியகத்தின் (AAIB) குழு இந்த விமானத்தின் பிளாக் பாக்ஸை, மருத்துவ மாணவர்களின் ஹாஸ்டல் மொட்டை மாடியில் இருந்து கண்டெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது பிளாக் பாக்ஸ் கிடைத்திருக்கும் நிலையில், விமான விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் விமானப் போக்குவரத்து அமைச்சகக் குழுக்களுக்கு உதவி செய்ய, குஜராத் மாநிலத்தின் 40க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் களத்தில் செயலாற்றி வருகின்றனர்.
Ahmedabad Plane Crash Black Box: பிளாக் பாக்ஸில் என்ன இருக்கும்?
விமான விபத்து ஏற்பட்டதன் காரணத்தை கண்டுபிடிக்க பிளாக் பாக்ஸ் மிக முக்கியமானது ஆகும். இந்த பிளாக் பாக்ஸ் சாதனத்தில் விமானத் தரவுப் பதிவு (FDR), காக்பிட் குரல் பதிவு (CVR) ஆகிய கருவிகள் உள்ளன. விமானத் தரவுப் பதிவு என்பது விமானம் தொடர்பான அனைத்து தொழில்நுட்பத் தரவையும் பதிவு செய்யும். காக்பிட் குரல் பதிவு கருவி இரண்டு விமானிகளுக்கும் இடையேயான காக்பிட் உரையாடலை கடைசி நிமிடம் வரை பதிவு செய்யும். காக்பிட் என்பது விமானிகள் விமானத்தை இயக்கும் இடமாகும்.
விமான விபத்துகள் நிகழ்ந்தால் பெரும்பாலும் விமானத்தின் பின் பகுதியை விட முகப்பு பகுதியே கடுமையான சேதத்திற்கு உள்ளாகும். இதனாலேயே பிளாக் பாக்ஸ் விமானத்தின் பின்பகுதியில் பொருதப்படுகிறது. விமான விபத்தின் காரணத்தை விரைவாக கண்டறிய இந்த பிளாக் பாக்ஸ் உதவும். கடுமையான வெப்பத்தைத் தாங்கும் வகையில், குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு 1,100 செல்ஷியஸ் வரை வெப்பநிலையைத் தாங்கும் வகையில் பிளாக் பாக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
Ahmedabad Plane Crash: DVR சாதனங்கள்
பிளாக் பாக்ஸ் விசாரணையில் முக்கிய பங்காற்றினாலும் கூட, விமானத்தின் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர்களும் (DVRs) முக்கியத்துவம் பெறுகிறது. காக்பிட் மற்றும் கேபினில் பகுதிகள் உட்பட விமானங்களில் பொருத்தப்பட்டிருக்கும் பல்வேறு CCTV கேமராக்களில் இருந்து வீடியோ காட்சிகளை இந்த DVR சாதனங்கள் பதிவு செய்கின்றன. இது விசாரணைகளுக்கு கூடுதல் காட்சி சூழலை கொடுக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ