)
Ahmedabad Air India Plane Crash All 242 Fears Dead : ஜூன் 12 புதன்கிழமை அகமதாபாத் அருகே நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 242 பயணிகளும் உயிரிழந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
விமான விபத்து:
அகமதாபாத்திலிருந்து லண்டன் (கேட்விக்) வழித்தடத்தில் இயக்கப்பட்ட போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தில் விஜய் ரூபானி, அவரது குழுவின் பல உறுப்பினர்களுடன் இருந்தார். சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் மேகனி நகர் பகுதியில் விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
242 பேரும் உயிரிழப்பா?
விபத்துக்குள்ளான விமானத்தில், பயணிகள், பைலட்டுகள் மற்றும் விமான ஊழியர்களோடு சேர்ந்து 242 பேர் பயணம் செய்தனர். விபத்து, மதியம் 1:38 மணியளவில் ஏற்பட்டிருக்கிறது. விமானம், டேக்-ஆஃப் ஆன 10 நிமிடங்களுக்குள் இந்த விபத்தானது நடந்திருக்கிறது. இதில் இந்தியர்கள், பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர்கள், போர்த்துகீஸை சேர்ந்தவர்கள் என்று பலர் பயணித்திருக்கின்றனர். 2 கைக்குழந்தைகள், குழந்தைகள் என்று பலர் இந்த விமானத்தில் இருந்துள்ளனர்.
விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இதற்கென்று முகாம்கள் அமைத்தும் இந்திய இராணுவ வீரர்கள் களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் 242 பேரும் தற்போது உயிரிழந்திருப்பதாக அகமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ் மாலிக் தெரிவித்திருக்கிறார். இருப்பினும், இது குறித்து அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
முன்னாள் முதலமைச்சர் பலி? ட்வீட் நீக்கம்..
அகமதாபாத் அருகே நடந்த துயரமான ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் மறைவை உறுதிப்படுத்தும் வகையில், மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் பரிமல் நத்வானி சமூக ஊடகங்களில் இரங்கல் செய்தியை வெளியிட்டிருந்தார். இருப்பினும், அந்த ட்வீட் பின்னர் நீக்கப்பட்டது. அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலை வெளியிடவில்லை. ஆகையால், நிலைமை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
பயணிகள் பட்டியலில் விஜய் ரூபானியின் பெயர் இருப்பதாக ஆரம்ப அறிக்கைகள் தெரிவித்தனர். இது பின்னர் மாநில அதிகாரிகள் மற்றும் ஏர் இந்தியா வட்டாரங்களால் சரிபார்க்கப்பட்டது. பாஜகவின் முக்கிய தலைவரான ரூபானி, 2016 முதல் 2021 வரை குஜராத்தின் முதலமைச்சராக பணியாற்றினார்.
விமானத்தில் 53 பிரிட்டிஷ் குடிமக்கள், 169 இந்தியர்கள், 1 கனடியர் மற்றும் 7 போர்த்துகீசிய குடிமக்கள் உட்பட 242 நபர்கள் இருந்ததாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு MayDay அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதன் விமானம் எந்த பதிலையும் அளீக்கவில்லை என்பதை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உறுதிப்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து இந்திய அரசாங்கம் உயர் மட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் மீட்பு முயற்சிகளை மேற்பார்வையிட மூத்த அமைச்சர்களை அனுப்பியுள்ளார். மீட்பு நடவடிக்கைகள் தொடர்வதால் மேலும் சில அப்டேட்கள் வர காத்திருக்கின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ