)
Air India Black Box Investigation: அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா AI-171, Boeing Dreamliner 787-7 விமானம், பிஜே மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியின் மீது மோதி கடும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேரும், மருத்துவமனை வளாகத்தில் இருந்த 33 பேர் என மொத்தம் 274 பேர் உயிரிழந்தனர்.
பிளாக் பாக்ஸ் கண்டுபிடிப்பு
விபத்தில் சிக்கி சிதைந்த விமானத்தின் பிளாக் பாக்ஸ்கள் கண்டறியப்பட்ட நிலையில், அதில் இருந்த தகவல்கள் வெற்றிகரமாக தரவிறக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், அவை தற்போது ஆய்வுசெய்யப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விபத்தில் பிளாக் பாக்ஸ்கள் கடுமையாக சேதமடைந்திருந்தன. இந்த பிளாக் பாக்ஸ்களில் FDR என்னும் விமானத் தரவுப் பதிவு, CVR என்னும் காக்பிட் குரல் பதிவு ஆகிய கருவிகள் உள்ளன. FDR விமானம் தொடர்பான அனைத்து தொழில்நுட்பத் தரவையும் பதிவு செய்யும். CVR இரண்டு விமானிகளுக்கும் இடையேயான உரையாடலை கடைசி நிமிடம் வரை பதிவு செய்யும்.
இந்தியாவிலேயே நடக்கும் ஆய்வு
இந்நிலையில், பிளாக் பாக்ஸ்கள் கடுமையாக சேதமடைந்திருப்பதால் அதில் இருக்கும் தரவுகளை மீட்டெடுக்க முடியுமா என்ற கேள்விகள் எழுந்தன. FDR மற்றும் CVR சாதனங்களின் தரவுகளைப் பிரித்தெடுப்பதற்காக அமெரிக்காவிற்கு அனுப்பக்கூடும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் அவை இந்தியாவிலேயே ஆய்வு செய்யப்பட்டன.
வெற்றிகரமாக பதிவிறக்கம்
தற்போது பிளாக் பாக்ஸின் CPM மற்றும் நினைவக தொகுதியை பாதுகாப்பாகப் பிரித்தெடுப்பதில் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) வெற்றியடைந்து, தரவுகளை பதிவிறக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான விடுதியின் கூரையில் இருந்து ஒரு பிளாக் பாக்ஸ் கண்டெடுக்கப்பட்டது. மற்றொரு பிளாக் பாக்ஸ் இடிபாடுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரண்டு பெட்டிகளும், நேற்று முன்தினம் (ஜூன் 24) டெல்லியில் உள்ள AAIB ஆய்வகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டதாக அரசு தெரிவித்தது.
விமான விபத்துக்கான காரணம் என்ன?
முதல் கருப்புப் பெட்டி அன்று மதியம் 2 மணிக்கும், இரண்டாவது கருப்புப் பெட்டி மாலை 5.15 மணிக்கும் ஆய்வகத்தை அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த தரவு பிரித்தெடுத்தல் செவ்வாய்கிழமை தொடங்கி நேற்றே நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CVR தரவு விமானி அறை உரையாடல்கள், குழுவினரின் பதில்கள் மற்றும் சுற்றுப்புற ஒலிகள் ஆகியவை குறித்தும், FDR உயரம், வான் வேகம், விமானக் கட்டுப்பாட்டு உள்ளீடுகள் மற்றும் இயந்திர செயல்திறன் போன்ற அளவுருக்களைக் கொடுக்கும் எனலாம்.
இதுகுறித்து மத்திய அரசு தரப்பில், "CVR மற்றும் FDR தரவுகளின் பகுப்பாய்வு நடந்து வருகிறது. விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசையை மறுகட்டமைத்து, விமானப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் காரணிகளைக் கண்டறியும் முயற்சியில் உள்ளோம். ஏர் இந்தியாவின் Boeing 787-8 Dreamliner விமானம், புறப்பட்ட 36 வினாடிகளில் விபத்துக்குள்ளானது. பிளாக் பாக்ஸ்களின் தரவுகள் வெற்றிகரமாக கிடைத்திருப்பதன் மூலம் விபத்துக்கான காரணங்களை அறியும் செயல்பாட்டில் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது எனலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ