இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்.. அரபிக்கடலில் ஏவுகணை சோதனை! வீடியோ

கடல்வழி தாக்குதலை எதிர்கொள்ள இந்திய கடற்படை தயாராக இருப்பதை மேற்கொண்ட ஒத்திகை மூலம் வெளிக்காட்டி உள்ளது.

Written by - R Balaji | Last Updated : Apr 27, 2025, 05:10 PM IST
  • இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்
  • கடல் வழி தாக்குதலை எதிர்கொள்ள இந்திய கடற்படை தயாராகி வருகிறது
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்.. அரபிக்கடலில் ஏவுகணை சோதனை! வீடியோ

ஜம்மு காஷ்மீர் அருகே இருக்கும் பகல்காமின் பைசரன் என்ற பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நுழைந்து திடீரென தூப்பாக்கி சூடு நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' மேற்கொண்டுள்ளது. 

இதையடுத்து இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் வெளியேற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. அதேபோல் அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதை ரத்து செய்தல் உள்ளிட்ட அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. விரைவில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது. அதேசமயம் பாகிஸ்தானும் ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. எனவே இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. 

இந்த நிலையில், கடல் வழி தாக்குதல்களை எதிர்கொள்ளவும் சண்டையிடவும் இந்திய கடற்படை தயாராக இருப்பதை மேற்கொண்ட ஒத்திகை மூலம் வெளிக்காட்டி உள்ளது. அரபிக் கடலில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படை போர் கப்பல்கள் ஏவுகணை தாக்குதல்களை முறி அடிக்கும் ஒத்திகையில் ஈடுபட்டிருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, போர் கப்பலில் இருந்து வரும் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் ஏவுகணை ஒத்திகையில் இந்திய கடற்படை போர் கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தி உள்ளன. தொலைதூர இலக்கை தாக்க கடற்படை தயார் நிலையில் உள்ளன. நம் நாட்டின் கடல்சார் பாதுகாப்பை உறுதிசெய்ய, எந்த நேரமும் எந்த வகையிலும் எதிர்கொள்ள கடற்படை தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிங்க: பாகிஸ்தானுடனான வர்த்தக உறவில் விரிசல்! இந்தியாவில் என்னென்ன பொருட்களின் விலை உயரும்!

மேலும் படிங்க: 'மோடி எதுவுமே செய்ய மாட்டார்... உங்களை தூங்க வைத்துவிடுவார்' - சுப்பிரமணியன் சுவாமி தாக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News