போக்குவரத்து விதிகளில் அதிரடி மாற்றம்! இனி ரூ. 1000 இல்லை, ரூ. 5000 அபராதம்!

New Traffic Rules: போக்குவரத்து அபராதங்களை உயர்த்துவது அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்து, நாட்டில் சாலை விபத்துக்களின் விகிதங்களை குறைக்க உதவுகிறது.

Written by - RK Spark | Last Updated : Mar 19, 2025, 07:05 AM IST
  • புதிய போக்குவரத்து விதிகள் அறிமுகம்.
  • ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
  • மும்மடங்கு அபராதம் அதிகரிப்பு.
போக்குவரத்து விதிகளில் அதிரடி மாற்றம்! இனி ரூ. 1000 இல்லை, ரூ. 5000 அபராதம்!

New Traffic Rules: மார்ச் 1, 2025 முதல் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகையில் கணிசமான அளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் மூலம் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்திய அரசாங்கம் வலுவான முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த புதிய அபராதங்கள் வாகன ஓட்டுநர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது வாகன ஓட்டிகள் சாலை விதிகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. சில குற்றங்களுக்கு அபராத தொகை பத்து மடங்கு வரை உயர்ந்துள்ளது. சில விதிமீறல்களுக்கு ரூ. 25,000 வரை அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். இது கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் கடுமையான விளைவுகளை நினைவூட்டுகிறது.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | மீண்டும் அகவிலைப்படி அதிகரிப்பு: நாளை முக்கிய அறிவிப்பு? ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்

புதிய அபராதங்கள்

குறிப்பிடத்தக்க அபராதங்களில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிரான நடவடிக்கையும் உள்ளது, குடிபோதையில் வாகனம் ஓட்டும் குற்றவாளிகளுக்கு 10,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்களுக்கு இந்த அபராத தொகை மேலும் அதிகரிக்கும். இந்த அபராத தொகை விபத்துக்களை கட்டுப்படுத்தவும், சாலையைப் பயன்படுத்துவோர் அனைவரின் உயிரைப் பாதுகாக்கவும் அரசாங்கத்தின் உறுதியை எடுத்துக்காட்டுகிறது.

வாகனம் ஓட்டும் போது மொபைல் போன்களைப் பயன்படுத்துவது பெரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த தவறுகளில் ஈடுபடுபவர்களுக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும், இதன் முந்தைய அபராதம் ரூ. 500 ஆக இருந்தது. இந்த மாற்றம் கவன சிதைவால் ஏற்படும் விபத்துகளை தடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஹெல்மெட் அணிவது, சீட் பெல்ட் அணிவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கும், சீட் பெல்ட் அணியாமல் புறக்கணிக்கும் டிரைவர்களுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும். மேலும், அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யும் அபாயமும் ஏற்படலாம்.

ஓட்டுநர் ஆவண மீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. செல்லுபடியாகும் வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கினால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படலாம், காப்பீடு இல்லாமல் வாகனத்தை இயக்கினால் ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் இதே குற்றங்கள் நடந்தால் அபராதம் ரூ.4,000 ஆக இரட்டிப்பாகும். மேலும், செல்லுபடியாகும் மாசு சான்றிதழை வைத்திருக்கவில்லை என்றால் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும், இது சாலை பாதுகாப்புடன் சுற்றுச்சூழல் தரத்தை பராமரிப்பதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.

இரு சக்கர வாகனத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்றால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். கவனக்குறைவாக வாகனம் ஓட்டி பிடிபட்டால் ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், அவசரகால வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்வது, உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடிய கடுமையான குற்றமாகும். இதற்கு ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்படும். கூடுதலாக, சிக்னல் ஜம்பிங்கிற்கு இப்போது ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படுகிறது, அதே நேரத்தில் அதிக பாரம் ஏற்றும் வாகனங்களுக்கு ரூ. 20000 அபராதம் விதிக்கப்படும். 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ. 25000 அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதங்கள் அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகளை உறுதி செய்வதற்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.

மேலும் படிக்க | Family Pension: குடும்ப ஓய்வூதியத்தில் மகள்களுக்கு உரிமை உள்ளதா... விதிகள் கூறுவது என்ன

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News