பீகார் சட்டமன்றத் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும்: தேதிகளை அறிவித்த தேர்தல் ஆணையம்

Bihar Assembly Elections 2025: இந்தியத் தேர்தல் ஆணையம் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்துள்ளது. இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 6, 2025, 05:24 PM IST
  • பீகார் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன.
  • 90,712 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.
  • முழு அட்டவணையை இங்கே காணலாம்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும்: தேதிகளை அறிவித்த தேர்தல் ஆணையம்

Bihar Assembly Elections 2025: பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது, இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 22, 2025 அன்று முடிவடைகிறது. 2020 சட்டமன்றத் தேர்தலில், வாக்குப்பதிவு மூன்று கட்டங்களாக நடந்தது. இருப்பினும், இந்த முறை, பண்டிகை காலத்தை மனதில் கொண்டு, அரசியல் கட்சிகள் ஒரு-கட்டத் தேர்தல்கள் அல்லது இரண்டு கட்டத் தேர்தல்கள் சரியாக ருக்கும் என தங்கள் கருத்துகளை தெரிவித்திருந்தன.

Add Zee News as a Preferred Source

90,712 வாக்குச் சாவடிகள்

இந்த முறை பீகார் தேர்தலில் 90,712 வாக்குச் சாவடிகள் இருக்கும், சராசரியாக, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 718 வாக்காளர்கள் இருப்பார்கள் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறினார். "SIR-க்குப் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் தேதிக்குப் பிறகு, வெளியிடப்பட வேண்டிய வாக்காளர் பட்டியல் இறுதியானதாக இருக்கும்," என்று குமார் கூறினார்.

அனைத்து வாக்குச் சாவடிகளின் இணையதள ஒளிபரப்பு

இந்த முறை அனைத்து வாக்குச் சாவடிகளின் இணையதள ஒளிபரப்பை (webcasting) இருக்கும் என CEC அறிவித்தது. இந்த முறை வாக்காளர்கள் தங்கள் ஸ்மார்ட்போனை வாக்குச்சாவடி வெளியே வைக்கலாம் என்றும் அவர் அறிவித்தார். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா ஒருவர் என 243 பார்வையாளர்கள் இருப்பார்கள் என்று குமார் கூறினார்.

Bihar Election Dates Phase 1: பீகார் தேர்தல் தேதிகள், கட்டம் 1 இன் முழு அட்டவணை

- வழக்கறிக்கை அறிவிப்பு (Gazette Notification) வெளியிடப்படும் தேதி : 10.10.2025
- வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய கடைசி தேதி : 17.10.2025
- வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும் தேதி : 18.10.2025
- வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி: 20.10.2025
- வாக்கெடுப்பு தேதி: 06.11.2025
- தேர்தல் முடிவடையும் தேதி : 16.11.2025

Bihar Election Dates Phase 2: பீகார் தேர்தல் தேதிகள், கட்டம் 2 இன் முழு அட்டவணை

- வழக்கறிக்கை அறிவிப்பு (Gazette Notification) வெளியிடப்படும் தேதி : 13.10.2025
- வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய கடைசி தேதி : 20.10.2025
- வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய கடைசி தேதி : 21.10.2025
- வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி: 23.10.2025
- வாக்கெடுப்பு தேதி: 11.11.2025
- தேர்தல் முடிவடையும் தேதி: 16.11.2025

பீகார் தேர்தல் 2025 வாக்களிப்பு நேரம்

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். வரிசையில் இருப்பவர்களுக்கு ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படும்.

பீகார் தேர்தல் 2025 முடிவுகள் வரும் தேதி

பீகார் தேர்தல் முடிவு: 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குகள் நவம்பர் 14 அன்று எண்ணப்படும்.

Special Intensive Revision: மொத்தம் 7.42 வாக்காளர்கள்

தேர்தல் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் முடிந்த பிறகு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட பீகாரின் இறுதி வாக்காளர் பட்டியலில் 3.92 கோடி ஆண் வாக்காளர்களும் 3.5 கோடி பெண் வாக்காளர்களும் உட்பட மொத்தம் 7.42 கோடி பேர் உள்ளனர்.

பீகார் தேர்தல் 2025 பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஒரு பெரிய பாதுகாப்பு தயார்நிலை நடவடிக்கையாக, மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, 5,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட 500 க்கும் மேற்பட்ட மத்திய ஆயுதக் காவல் படைகளின் (CAPFs) கம்பனிகள், பீகார் முழுவதும் நிறுத்தப்பட உள்ளன. இந்த பணியில் மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) 121 கம்பனிகளும், எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) யிலிருந்து சுமார் 400 கம்பனிகளும், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP), மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) மற்றும் சஷாஸ்திர சீமா பால் (SSB) போன்ற பிற CAPF களின் குழுக்களும் அடங்கும். 400 கம்பனிகளில், BSF இன் 99 கம்பனிகள் ஏற்கனவே பீகாரை அடைந்துவிட்டன, மேலும் பிற CAPF குழுக்களும் செயல்முறையை தொடங்கிவிட்டன.

மேலும் படிக்க | Tamil News LIVE மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா! இன்று கனமழைக்கு வாய்ப்பு

மேலும் படிக்க | இளைஞர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை! பிரதமர் மோடியின் புதிய திட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News