)
Bihar News In Tamil: பீகார் முதல்வர் பெரிய அறிவிப்பு: விரைவில் 2025 பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், பல அதிரடியான அறிவிப்புக்களை ஆளும் கட்சி முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்டு வருகிறார். குழந்தைகள், ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் அரசு ஊழியர்களை குறி வைத்து வாக்குறுதிகளை வழங்கி வருகிறார். அந்த வரிசையில், மாநிலத்தின் தொழில்களை ஊக்குவிப்பதற்காக புதிய பீகார் தொழில்துறை முதலீட்டு ஊக்குவிப்பு தொகுப்பு 2025 (BIPPP) செயல்படுத்தியுள்ளார். அதுக்குரித்த விவரங்களை பார்ப்போம்.
- ரூ.40 கோடி வரை வட்டி மானியம் (Interest Subvention) வழங்கப்படும்.
- புதிய யூனிட்களுக்கு 14 ஆண்டுகளுக்கு நிகர SGSTயின் அங்கீகரிக்கப்பட்ட திட்ட செலவில் 300 சதவீதம் வரை திருப்பிச் செலுத்தப்படும்.
- 30 சதவீதம் வரை மூலதன மானியம் வழங்கப்படும்.
- ஏற்றுமதி ஊக்குவிப்பு வரம்பு 14 ஆண்டுகளுக்கு ரூ.40 லட்சமாக இருக்கும்.
- திறன் மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிசக்தி பயன்பாடு, முத்திரை வரி மற்றும் நில மாற்ற கட்டணங்களை திருப்பிச் செலுத்துதல்,
- தனியார் தொழில்துறை பூங்காக்களுக்கு ஆதரவு
- காப்புரிமை பதிவு மற்றும் தர சான்றிதழ் ஆகியவற்றிற்கு உதவி வழங்கப்படும்.
முதல்வர் நிதீஷின் கூற்றுப்படி, 'இந்த புதிய தொழில்துறை தொகுப்பு 2025 இன் கீழ், முதலீட்டை ஊக்குவிக்க இலவச நிலம் ஒதுக்கப்படும். 100 கோடிக்கு மேல் முதலீடு செய்து 1000க்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்துறை யூனிட்டுக்களுக்கு 10 ஏக்கர் நிலம் வரை இலவசமாக ஒதுக்கப்படும். 1000 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் தொழில்துறை யூனிட்டுக்களுக்கு 25 ஏக்கர் நிலம் வரை இலவசமாக ஒதுக்கப்படும். 500 ஃபார்ச்சூன் (Fortune) நிறுவனங்களுக்கு 10 ஏக்கர் நிலம் வரை இலவசமாக ஒதுக்கப்படும்.
பீகார் அரசின் உத்தரவின்படி, புதிய பீகார் தொழில்துறை முதலீட்டு ஊக்குவிப்பு தொகுப்பு 2025-ன் கீழ் அதன் பலன்களைப் பெற முதலீட்டாளர்கள் மார்ச் 31, 2026 க்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.
இந்த புதிய தொழில்துறை தொகுப்பு 2025 கீழ் 5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலைகள் மற்றும் வேலைவாய்ப்பை வழங்க உதவும். இந்த முயற்சியின் நோக்கம் பீகாரில் தொழில்களை மேலும் மேம்படுத்துவதாகும். பீகார் இளைஞர்கள் திறமையானவர்களாகவும், தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் மாநிலத்திற்குள் அதிகபட்ச வேலைவாய்ப்பைப் பெற முடியும், மேலும் அவர்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் கூறினார்.
बिहार में उद्योगों को प्रोत्साहित करने के लिए सरकार ने बियाडा एमनेस्टी पॉलिसी 2025 के बाद अब नया बिहार औद्योगिक निवेश प्रोत्साहन पैकेज 2025 (BIPPP-2025) लागू किया है। इसके तहत:-
— Nitish Kumar (@NitishKumar) August 26, 2025
(1) 40 करोड़ रूपए तक की ब्याज सब्सिडी (Interest Subvention) दी जाएगी।
(2) नई इकाइयों को स्वीकृत…
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ