Bizarre News: நாம் எப்போதுமே சுத்தம் சுகாதாரம் நிறைந்த உணவுகளை சாப்பிட விரும்புவோம். வீட்டில் நம் பெற்றோர் உண்டாக்கும் உணவுகள் எப்போதும் மிகுந்த கவனத்துடனும் அறிக்கையுடனும் சமைக்கப்படும் வேளையில், வெளிப்புறத்தில் விற்கப்படும் உணவுகளின் சுகாதாரம் என்பது எப்போதும் கேள்விக்குறியாகவே இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாலையோர கடைகள் எல்லாமே சுகாதாரமற்றவை என பொதுமைப்படுத்துவது தவறுதான் என்றாலும், தகுந்த சுகாதார பாதுகாப்பு இல்லாமல் சாலையோரங்களிலும், பெரிய பெரிய உணவகங்களிலும் உணவுகள் பரிமாறப்படுவது நடக்கத்தான் செய்கிறது என்பதே கவலைக்குரிய ஒன்றாகும்.


குறிப்பாக, இது கோடைக்காலமாகும். ஜூஸ், ஐஸ்கிரீம் ஆகிய உணவுப் பொருள்களின் விற்பனை என்பது அதிகமாக இருக்கும். ஆரோக்கியமான ஜூஸ், ஐஸ்கிரீம்கள் இருந்தாலும் தரமற்ற பொருள்கள் மூலமும், கலப்படமாக மூலப்பொருகள்கள் மூலம் ஐஸ்கிரீம் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்ட சம்பவங்களை நாம் முந்தைய காலத்தில் கேட்டறிந்துள்ளோம். ஆசிட் கலந்த ஐஸ், தரமற்ற ஐஸ் ஆகியவற்றால் பலருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்ட சம்பவங்களையும் நாம் பார்த்துள்ளோம்.


அதிர்ச்சிக்கர ஐஸ்கிரீம் விற்பனை


ஆனால், தற்போது தெலங்கானாவில் நடந்த சம்பவம் சுகாதாரமற்ற உணவு என்பதைவிட அந்த விற்பனையாளரின் அருவறுக்கத்தக்க செயலானது வெளிப்புறங்களில் உணவருந்தும் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அந்த அருவறுக்கத்தக்க செயல் குறித்தும் அதன் முழுமையான விவரங்களையும் இந்த தொகுப்பில் காணலாம். 


மேலும் படிக்க | Electoral Bonds: அதிக நன்கொடை பெற்ற டாப் 10 கட்சிகள்.... பாஜக டூ அதிமுக வரை!


தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் பொது வெளியில் தள்ளுவண்டி மூலம் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் ஒரு நபர், அவர் விற்கும் ஐஸ்கிரீமில் சிறுநீரையும், அவரது விந்தணுவையையும் கலந்து கொடுக்கும் அதிர்ச்சிக்கர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இதன்மூலம், வெளிப்புறங்களில் உணவருந்தோர் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாகி உள்ளனர். 


பொதுவெளியில் சுயமைதுனம்


வாரங்கல் மாவட்டத்தின் நெக்கொண்டா என்ற பகுதியில் பாலாஜி என பெயரிடப்பட்ட தள்ளுவண்டியின் மூலம் ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதில் ஐஸ்கிரீமில் விற்பனை செய்யும் நபரின் சிறுநீரகம் மற்றும், அங்கு விற்கப்படும் பளூடாவில் ஐஸ்கிரீமுக்கு அடியில் இருக்கு ஜூஸில் அந்த நபரின் விந்தணு கலந்திருப்பதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. 



அதாவது, வைரலாகி வரும் அந்த அதிர்ச்சிக்கர வீடியோவில் அந்த ஐஸ்கிரீம் விற்பனையாளர் பொதுவெலியில் மறைமுகமாக சுயமைதுனம் செய்து அந்த பளூடாவில் தனது விந்தணுக்களை கலக்கும் அருவறுப்பான செயல் பதிவாகி உள்ளது.


அத்துமீறிய கைது


இந்த அதிர்ச்சிக்கர சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு அமைச்சர்களிடம் தகவல் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து பல இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் அந்த வீடியோவில் இருந்த நபரின் பெயர் கலூரம் குர்பியா என தெரியவந்தது. கலூரம் குர்பியா ராஜஸ்தானை சேர்ந்தவர் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 


இதை தொடர்ந்து, நெக்கொண்டாவின் அம்பேத்கர் சென்டர் பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்ட நிலையில் கலூரம் குர்பியாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து பொது இடத்தில் ஆபாசமான செயல்களை செய்ததற்காக இந்திய தண்டனைச் சட்டம் 294 சட்டப்பிரிவின் கீழ் குர்பியா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருப்பினும், வீடியோவில் காணப்படும் இந்த அருவறுக்கத்தக்க செயலுக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து போலீசார் ஏதும் தகவல் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் - உச்சநீதிமன்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ