CCI Raids: நாட்டின் வர்த்தக ஒழுங்குமுறை அமைப்பான காம்படீஷன் கமிஷன் ஆஃப் இந்தியா (CCI), குரூப்எம், டென்ட்சு மற்றும் இன்டர்பப்ளிக் குரூப் உள்ளிட்ட உலகளாவிய விளம்பர ஜாம்பவான்களின் அலுவலகங்கள் மற்றும் ஒரு ஒளிபரப்பாளர் துறை குழுமத்தில், தேசிய தலைநகர் மண்டலமான என்சிஆர் மற்றும் மும்பையின் சில பகுதிகளில் திடீர் சோதனைகளை நடத்தியதாக ஜீ மீடியாவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
விலை கூட்டுச் சதி குறித்து விசாரிக்க இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக, ஆதாரங்களை மேற்கோள் காட்டி, செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள் விளம்பர விகிதங்கள் மற்றும் தள்ளுபடிகளை நிர்ணயிப்பதாகக் கூறப்படும் புகார்களைப் பெற்றதை அடுத்து, Competition Commission of India (CCI), கிட்டத்தட்ட 10 இடங்களில் சோதனைகளை நடத்தி வழக்கைத் தொடங்கியது.
மும்பை, புது தில்லி மற்றும் குருகிராமில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக ராய்ட்டர்ஸ் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் விளம்பர தளத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ள தருணத்தில் இந்த சோதனைகளும் நடந்துள்ளன. குறிப்பாக வால்ட் டிஸ்னி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்திய ஊடக சொத்துக்களுக்கு இடையேயான மிகப்பெரிய $8.5 பில்லியன் இணைப்பைத் தொடர்ந்து, இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த இணைப்பு டிவி மற்றும் ஸ்ட்ரீமிங் பிரிவுகளில் விளம்பரச் சந்தையில் கணிசமான 40% பங்கை பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஜெஃப்பெரிஸ் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொழில்துறையில் போட்டி இயக்கவியலை மாற்றும்.
பிரிட்டனின் WPP (WPP.L) நிறுவனத்திற்குச் சொந்தமான விளம்பர நிறுவனமான GroupM, அமெரிக்காவை தளமாகக் கொண்ட Interpublic இன் IPG Mediabrands பிரிவு மற்றும் ஜப்பானின் Dentsu ஆகியவற்றின் செய்தித் தொடர்பாளர்கள், இது தொடர்பாக ராய்ட்டர்ஸின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.
இந்திய ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் அறக்கட்டளையும் ராய்ட்டர்ஸுக்கு எந்த வித பதிலையும் அளிக்கவில்லை. மேலும் அதன் அமலாக்க நடவடிக்கைகள் அல்லது விலை கூட்டுச் சதி தொடர்பான வழக்குகளின் விவரங்களைப் பகிரங்கமாக வெளியிடாத காம்படீஷன் கமிஷன் ஆஃப் இந்தியாவும் இதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டது.
விளம்பர விலைகளை நிர்ணயிப்பதற்கும் தள்ளுபடிகள் குறித்து விவாதிப்பதற்கும் விளம்பர நிறுவனங்கள் சில ஒளிபரப்பாளர்களுடன் கூட்டுச் சேர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை CCI விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த திடீர் சோதனைகளின் போது, CCI அதிகாரிகள் பொதுவாக தொடர்புடைய ஆவணங்களை பறிமுதல் செய்து நிறுவன அதிகாரிகளிடமிருந்து சாட்சியங்களை சேகரிப்பார்கள். விசாரணை பல மாதங்களுக்கு நீடிக்கும். முழு செயல்முறையும் முழுமையாக ரகசியமாக வைக்கப்படும்.
டிசம்பர் 2024 இல், ஒரு தென் மாநிலத்தில் சில்லறை விற்பனையாளர்களுடன் விலை கூட்டுச் சதி செய்ததாகக் கூறப்படும் அறிக்கைகள் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக, Pernod Ricard மற்றும் Anheuser-Busch InBev உள்ளிட்ட மதுபான நிறுவனங்களின் அலுவலகங்களை CCI சோதனை செய்தது.
இந்திய ஒளிபரப்பு அறக்கட்டளை, ரிலையன்ஸ்-டிஸ்னி ஜாயிண்ட் வென்சர், சோனி மற்றும் ஜீ என்டர்டெயின்மென்ட் போன்ற குறிப்பிடத்தக்க நிறுவனங்கள் உட்பட, முக்கிய உள்நாட்டு ஒளிபரப்பாளர்களுக்கான பிரதிநிதித்துவ அமைப்பாக செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









