)
Chief Minister Mahila Rojgar Yojana: பீகார் மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு அதிகாரம் அளித்து, தன்னிறைவு பெறச் செய்வதற்கான ஒரு முக்கிய முயற்சியை அம்மாநில அரசு எடுத்ள்ளது. முதல்வர் நிதிஷ் குமாரின் ஆளும் அரசு, "முதலமைச்சர் மகிளா ரோஜ்கர் யோஜனா" (Chief Minister Mahila Rojgar Yojana) திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இந்தத் திட்டம் குறித்து சமூக ஊடக தளமான X தளத்தில் பகிர்ந்து கொண்ட முதலமைச்சர், பீகாரில் பெண்கள் அதிகாரமளிப்பதில் ஒரு மைல்கல்லாக மாறக்கூடிய "நேர்மறையான, தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்தும்" "முன்னோடியில்லாத முடிவு" எனக் கூறியுள்ளார். முதல்வர் மகிளா ரோஜ்கர் யோஜனா என்றால் என்ன? அதன்மூலம் யாருக்கு பயன்? முதல்வர் மகிளா ரோஜ்கர் யோஜனாவின் நன்மைகள் என்ன? முதல்வர் மகிளா ரோஜ்கர் யோஜனாவுக்கு எப்படி விண்ணப்பிப்பது? என்பதைக் குறித்து பார்ப்போம்.
பீகாரில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒரு பெண்ணாவது வேலைவாய்ப்பையோ அல்லது அவள் விரும்பும் சிறு தொழிலையோ தொடங்க உதவுவதற்காக நேரடி நிதி உதவியை வழங்குவதே இந்த திட்டமாகும். இந்த திட்டம் பீகார் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களில் இருக்கும் பெண்களுக்கு பயனளிக்கும், அவர்களுக்கு நிதிரீதியாக சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் மாற ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும்.
இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள ஒவ்வொரு பெண்ணும் தான் தேர்ந்தெடுத்த வேலையைத் தொடங்குவதற்கான முதல் தவணையாக ₹10,000 பெறுவார்கள். இந்தத் தொகை நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT) மூலம் பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படும், செப்டம்பர் 2025 முதல் பணம் செலுத்தப்படும்.
முதலமைச்சர் முதலமைச்சர் மகிளா ரோஜ்கர் யோஜனா திட்டத்தின் முக்கிய அம்சம் கூடுதல் நிதி உதவு வழங்கப்படுவதாகும். ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒருவர் தனது தொழிலை நடத்துகிறார் என்றால், அரசாங்கம் அவரின் வருவாய்மதிப்பிடு செய்து, தேவைப்பட்டால், அந்தப் பெண் தனது பணியை விரிவுபடுத்த ₹2 லட்சம் வரை கூடுதல் உதவியைப் பெறலாம். இது பெண்கள் தங்கள் முயற்சிகளை அதிகரிக்க உதவும்.
ஆர்வமுள்ள பெண்களுக்கான விண்ணப்ப செயல்முறை விரைவில் தொடங்கும். கிராமப்புறங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதை கிராமப்புற மேம்பாட்டுத் துறை கையாளும். அதே நேரத்தில் நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் துறை நகர்ப்புற விண்ணப்பதாரர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
நிதி உதவிக்கு கூடுதலாக, பெண்கள் தயாரிக்கும் பொருட்களின் விற்பனையை அரசாங்கம் ஆதரிக்கும். கிராமங்கள் மற்றும் நகரங்களில் தயாரிப்பு விற்பனைக்காக சிறப்பு சந்தை இடங்கள் உருவாக்கப்படும், மேலும் ஆன்லைன் சந்தைகள் மற்றும் அரசாங்க கொள்முதல் மூலம் பெண்களுக்கான பொருட்கள் விற்பனை ஊக்குவிக்கப்படும்.
இந்தத் திட்டம் பெண்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுவது மட்டுமல்லாமல், உள்ளூர் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது, இதனால் மக்கள் வேலைக்காக இடம்பெயர வேண்டிய தேவை குறைகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22