)
Rajasthan Crime News: இந்த காலத்தில் சிறார்கள் சில விபரீத முடிகளை எடுத்து வருகின்றனர். சிறுசிறு விஷயங்களுக்கு அவர்கள் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். தற்போது அப்படியொரு சம்பவம் தான் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்துள்ளது. அதாவது, ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் நான்காவது மாடியில் இருந்து 9 வயது சிறுமி உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (நவம்பர் 1) நடந்துள்ளது.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, சிசிடிவி காட்சிகளில் சிறுமி ஒரு தடுப்புச் சுவரில் ஏறி குதிப்பதை காட்டியுள்ளது. சுமார் 47 அடி உயரத்தில் இருந்து சிறுமி விழுந்தது தெரியவந்துள்ளது. சுமார் 10 விநாடிகள் கொண்ட இந்த வீடியோவில், சிறுமி தடுப்புச்சுவர் மீது ஏறுகிறார். ஓரிரு நொடிகள் அங்கு அமர்ந்து, அதன்பிறகு அவர் குதிப்பது வீடியோவில் உள்ளது. 47 அடி உயரத்தில் இருந்து சிறுமி விழுந்திருக்கிறார்.
இதில், அவரது தலை சுவரில் மோதியுள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ள ஆசிரியர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். உயிரிழந்த சிறுமி 4 ஆம் வகுப்பு படிக்கும் அமைரா என்பது தெரியவந்துள்ளது.
சிறுமி உயிரிழந்தது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, பள்ளிக்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர்.. சிறுமி விழுந்த பகுதி சுத்தம் செய்யப்பட்டிருப்பதையும், இரத்தக் கறைகள் எதுவும் தெரியாமல் இருப்பதையும் போலீசார் கண்டனர். சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் சிறுமியின் மரணம் நிகழ்ந்ததாகக் கூறி, பள்ளி நிர்வாகத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பள்ளி வளாகத்திற்குள் இதுபோன்ற ஒரு சம்பவம் எப்படி நடக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரினர். அமைரா தனது பெற்றோருக்கு ஒரே மகள். அவரது தாயார் ஒரு வங்கியில் பணிபுரிகிறார். அவரது தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். மேலும் அவர்கள் மானசரோவர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட SFS பகுதியில் வசிப்பவர்கள். தனது மகளின் உயிருக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். விசாரணைக்குப் பிறகு, சிறுமியின் மரணத்திற்கான சரியான காரணம் வெளிவரும் என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.
மேலும் படிக்க: அமைச்சராக பொறுப்பேற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன்! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ