ஆசிரியர் தினத்தையொட்டி குடியரசுத்தலைவர் வாழ்த்து....!
ஆசிரியர் தினத்தையொட்டி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆசிரியர்களுக்கு வாழ்த்து...!
ஆசிரியர் தினத்தையொட்டி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆசிரியர்களுக்கு வாழ்த்து...!
முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான இன்று ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிகள் அனைவருக்கும் தெரியும். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பார்கள். நமக்கு அகரத்தை சொல்லித் தந்து ஆக்கத்தை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களுக்கு நன்றியும் அன்பும் செலுத்தும் நாள் இந்த நாள்...
இந்நிலையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்துகிறேன். நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
நமது சிறந்த ஆசான்கள் நமது தேசத்தை கட்டமைக்க நமக்கு வழிகாட்டட்டும்; உலகம் முழுவதும் நல்லறிவு, சமாதானம், இணக்கம் தழைத்தோங்க ஆசிரியர்கள் உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார்...