)
QUAD Summit 2025 Latest Updates: குவாட் (QUAD) மாநாடு கூட்டத்திற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு வருகை தருவார் என்றத் தகவலை வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி (Foreign Secretary Vikram Misri) நேற்று (ஜூன் 17, புதன்கிழமை) உறுதிப்படுத்தினார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி டிரம்பிற்கு இந்தியாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறினார். டிரம்ப் அழைப்பை ஏற்றுக்கொண்டார், மேலும் அவரது இந்திய வருகை குறித்து அவர் உற்சாகமாக உள்ளார் எனவும் கூறினார்.
நரேந்திர மோடி - டொனால்ட் டிரம்ப் உரையாடல்
இரு தலைவர்களும் 35 நிமிட உரையாடல் நடத்தினர். இரு நாட்டு தலைவர்கள் ஜி7 உச்சிமாநாட்டின் (G7 Summit) போது சந்திக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவிற்கு சீக்கிரமாகத் திரும்ப வேண்டியிருந்தது, இதனால் இந்த சந்திப்பு நடக்கவில்லை என்றும் வெளியுறவுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
அதன் பிறகு, ஜனாதிபதி டிரம்பின் வேண்டுகோளின் பேரில், இன்று இரு தலைவர்களும் தொலைபேசியில் பேசினர். அவர்கள் கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் பேசினர் என வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேச்சு
ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஜனாதிபதி டிரம்ப் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசி இரங்கல் தெரிவித்தார். மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆதரவையும் தெரிவித்தார். அதன் பிறகு அவர்கள் பேசுவது இதுவே முதல் முறை. எனவே, பிரதமர் மோடி அதிபர் டிரம்புடன் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விரிவாகப் பேசினார் என்றும் மிஸ்ரி கூறினார்.
டொனால்ட் டிரம்ப் இந்தியா வருகை
டொனால்ட் டிரம்பின் இந்திய வருகையின் போது பல முக்கியமான விஷயங்கள் அவரது நிகழ்ச்சி நிரலில் இருக்க வாய்ப்புள்ளது.
குவாட் அமைப்பில் எத்தனை நாடுகள் உள்ளன?
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சேர்ந்து குவாட் அமைப்பை (Quadrilateral Security Dialogue) ஏற்படுத்தியுள்ளன.
குவாட் மாநாடு 2024 எங்கு நடந்தது?
கடைசி குவாட் மாநாடு 2024 இல் செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக 2023 ஆம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமாவில் குவாட் மாநாடு நடைபெற்றது
குவாட் மாநாடு 2025 எங்கு நடைபெறுகிறது?
இந்தாண்டுக்கான குவாட் மாநாடு 2025 இந்தியாவில் நடத்தப்படுகிறது. குவாட் 2025 மாநாட்டில் பங்கேற்க இந்தியாவிற்கு வருகை தர உள்ளார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.
குவாட் மாநாடு: 4 ஆண்டுகளில் 6 சந்திப்புகள்
இதுவரை, குவாட் குழுவின் தலைவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் 6 முறை சந்தித்துள்ளனர். இதில் இரண்டு மெய்நிகர் சந்திப்புகள் அடங்கும். குவாட் வெளியுறவு அமைச்சர்கள் எட்டு முறை சந்தித்துள்ளனர். குவாட் நாட்டு பிரதிநிதிகள் அனைத்து மட்டங்களிலும் தொடர்ந்து சந்தித்து ஒருவருக்கொருவர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ