1971 IND PAK போர்: காணாமல் போன 54 இந்திய வீரர்கள்... இன்று வரை விலகாத மர்மம்!

1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் காணாமல் போன 54 இந்திய வீரர்கள் கதை இன்று வரை மர்மமாகவே உள்ளது. 

Written by - R Balaji | Last Updated : May 9, 2025, 10:47 PM IST
1971 IND PAK போர்: காணாமல் போன 54 இந்திய வீரர்கள்... இன்று வரை விலகாத மர்மம்!

Forgotten 54 என்பது 1971ல் இந்தியா - பாகிஸ்தான் போருக்கு பிறகு, இந்திய ராணுவ வீரர்கள் 54 பேரை பாகிஸ்தான் காவலில் எடுத்து, திரும்பி வராத கதை. பல தசாப்தங்கள் கழித்தும் அவர்களது கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களது குடும்பம் இன்னும் பதில்களுக்காக காத்திருக்கின்றன. 

போரை யாரும் விரும்புவதில்லை. ஆனால் சில நேரங்களில் அது காலத்தின் கட்டாயமாக மாறுகிறது. தற்போது மீண்டும் பாகிஸ்தானுடனான போர் பதற்றமும் அப்படியே. 1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைக்காக, இந்தியா ராணுவம் பாகிஸ்தானுடன் மோதியது. இந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது, வங்கதேசம் தனிநாடாக உருவெடுத்தது. இருப்பினும் நமது நாடு பல வீரர்களை இழந்தது. 

குறிப்பாக 54 இந்திய இராணுவ வீரர்களின் கதி என்வென்றே தெரியவில்லை. அவர்களை தான் காணாமல் போன 54 அல்லது மறக்கப்பட்ட 54 என்று கூறப்படுகிறது. 1965 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் இந்தியா பாகிஸ்தானுடன் நடத்திய போரின்போது, இந்த 54 பேர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. எல்லை பிரிக்கப்பட்டத்தின் மூலம், இந்த போர் முடிவுக்கு வந்தாலும், இந்த வீரர்களின் குடும்பத்தினரின் சோகம் இதுவரை முடிவுக்கு வரவில்லை. 

வங்கதேசத்தை உருவாக்கிய 1947-48, 1965 மற்றும் 1971 போர்கள் அனைத்தும் புவிசார் அரசியலை மாற்றி அமைத்தன. 1971 போர் குறுகியதாக இருந்தாலும் தீர்க்கமானதாக இருந்தது. அதே ஆண்டு டிசம்பர் 16 அன்று, பாகிஸ்தான் நிபந்தனையற்ற சரணடைதலில் கையெழுத்திட்டது. மேலும், 90,000 க்கும் மேற்பட்டோர், எஸ்.எம். பர்க் மெயின்ஸ்பிரிங்ஸ் ஆஃப் இந்தியன் அண்ட் பாகிஸ்தான் ஃபாரின் பாலிசிகளில் குறிப்பிடுவது போல, பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். இருப்பினும், 54 இந்திய வீரர்கள் ஒருபோதும் திரும்பி வரவில்லை.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 83 83 இந்திய வீரர்கள் இருப்பதாகவும், அவர்களில் "காணாமல் போன 54 பேர்" இன்னும் பாகிஸ்தானின் காவலில் இருப்பதாகவும் கூறியது. சிலர் எல்லையைத் தாண்டிச் சென்றிருக்கலாம் அல்லது உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் எந்த தகவலும் உறுதியாக தெரியவில்லை. 

இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் சுந்தர் சுதா டோக்ரா புத்தகம் ஒன்றை எழுதினார். "Missing in Action: The Prisoners Who Never Came Back" என்ற பெயரில் வெளியிட்டார். இந்த புத்தகம் இராணுவக் கோப்புகள், வகைப்படுத்தப்பட்ட ஆவணங்கள், தனிப்பட்ட கடிதங்கள் மற்றும் குடும்பங்களுடனான நேர்காணல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உன்னிப்பாக ஆராயப்பட்ட விசாரணையை வழங்குகிறது. 

இவர்கள் கொல்லப்பட்டார்களா அல்லது பேரம் பேசுவதற்காகப் பயன்படுத்தப்பட்டார்களா? பாகிஸ்தான் சுட்டிக்காட்டியுள்ளபடி, சில உளவாளிகளா? ஜெனீவா மாநாட்டை மீறி அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்களா 1990களில் இந்திய அரசாங்கம் 54 பேரில் 15 பேர் "கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டவர்கள்" என்று அறிவித்து பிரமாணப் பத்திரங்களை ஏன் தாக்கல் செய்தது, பின்னர் அவர்கள் காணவில்லை என்று கூறியது ஏன்? உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்புகிறது. 

1983 ஆம் ஆண்டு ஒரு முறையும், 2007 ஆம் ஆண்டு ஒரு முறையும், குடும்ப உறுப்பினர்களின் இரண்டு குழுக்கள் பாகிஸ்தான் சிறைகளுக்குச் புகைப்படங்கள் மற்றும் கைதிகளின் விவரங்களை எடுத்துச் சென்றன.அவர்களை பாகிஸ்தான் கைதிகளை அணுகுவதை தகுத்ததாக கூறி திரும்பி வந்தனர். ஆனால் பாகிஸ்தான் அதை மறுத்தது. "அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன" என்று ஒரு உறவினர் 2007 இல் கூறினார்.

மேலும் படிங்க: 24 நகரங்கள்... 500 டிரோன்கள்... பாகிஸ்தானின் மிகப்பெரிய சதியை இந்தியா முறியடித்தது எப்படி?

மேலும் படிங்க: இந்தியா - பாகிஸ்தான் போர்: ஏடிஎம், யுபிஐ வங்கி சேவைகளுக்கு தடையா?

 

 

 

Trending News