)
இந்தியாவில் தங்கத்தின் மதிப்பு அதிக அளவில் உள்ளது, குறிப்பாக தென்னிந்தியாவில் தங்கத்தை முக்கியமான நிதி ஆதாரமாக கருதுகின்றனர். நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டு இருந்தாலும் அதனை வாங்குபவர்கள் எண்ணிக்கை குறையவில்லை. நடுத்தர மக்களுக்கு அவசர காலத்திற்கு தேவையான நிதியை இந்த தங்க நகைகள் தான் வழங்குகிறது. எனவே தான் இதன் மவுசு குறையாமல் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தங்கத்தின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் தங்க நகை கடத்தல், வெளிநாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது.

பலரும் நகைகளை வாங்குவது அதனை அவசர நேரத்தில் அடகு வைத்து பணமாக பெற்றுக் கொள்ள முடியும் என்று தான். ஆனால் நகைகளை அடகு வைப்பதில் சமீபத்தில் புதிய விதிகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி, நகை கடன் பெறுதல், திருப்பி கட்டுதல், வட்டி தொடர்பான பல விஷயங்களில் மாற்றம் இருந்தது. இதற்கு பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு தலையிட்டு இந்த விதிகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. தங்க நகை கடன் பெறுவதில் உள்ள புதிய விதிகளை பற்றி பார்ப்போம்.
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை
நகைகளை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெறுவதில் ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி நகைகளை திருப்பும்போது முழு பணத்தையும் கட்டி தான் திருப்ப வேண்டும் என்றும், மொத்த நகையின் மதிப்பில் 75% மட்டும் தான் கடனாக வழங்க வேண்டும் என்றும், அடகு வைக்கும் போது கட்டாயம் நகை ரசீது வேண்டும் போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது சில விதிகளை மாற்றி உள்ளது ரிசர்வ் வங்கி. அதன்படி 2 லட்சம் வரை நகைக்கடன் பெறுவதற்கு எந்த ஒரு கட்டுப்பாடுகளும் விதிக்க வேண்டாம் என்றும், இந்த புதிய விதிமுறைகளை அடுத்த ஆண்டு அமல்படுத்துங்கள் என்றும் மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கி சில விதிகளை மாற்றி அமைத்துள்ளது. புதிய விதிமுறையின் படி ரூபாய் இரண்டரை லட்சம் வரை நகைக்கடை ஆகும் போது 85 சதவீதம் கடன் பெற முடியும், அதற்கு மேல் கடன் வாங்கினால் ஒட்டுமொத்த நகை மதிப்பில் 80 சதவீதம் மட்டுமே வழங்கப்படும். ஒரு நபர் அடிக்கடி நகைகளை அடமானம் வைத்துக் கொண்டிருந்தால் அவருடைய கிரெடிட் மதிப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு விசாரணையில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி புதிய விதிகளின்படி நகைகளை ஏலம் விடும்போது 90% அதன் மதிப்பில் குறைந்த பட்சம் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ