)
Assam Cabinet Approved DA Hike: அசாம் அமைச்சரவை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 3% அதிகரித்து 58% ஆக உயர்த்தியுள்ளது, இது ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வருகிறது. மாநில ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றில் 3% உயர்வை அசாம் அரசு அறிவித்துள்ளது. அதன் விவரங்களை பார்ப்போம்.
அசாம் சேவைகள் (ROP) விதிகள், 2017 இன் படி, ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், அனைத்து அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரண (DR) உயர்வையும் அமைச்சரவை அங்கீகரித்தது.
அதிகரிப்பு : 3 சதவீதம்
புதிய விகிதம்: அகவிலைப்படி/டிஆர் விகிதம் அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் முந்தைய 55% இலிருந்து 58% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அமுலுக்கு வரும் தேதி: திருத்தப்பட்ட விகிதம் ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வருகிறது.
பயனாளிகள்: மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள்.
பண்டிகை காலத்திற்கு சற்று முன்னதாக, பயனாளிகளுக்கு நிதி நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிவாரணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ