)
GST Slabs Reduced : மக்கள் தினம்தோறும் பயன்படுத்தும், அன்றாட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மந்லா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.
டெல்லியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 3ஆம் தேதியான இன்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி வரியை எளிமையாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. இது முடிந்த பின், செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், தற்போது திருத்தப்பட்ட வரி (GST) விகிதங்களை அறிவித்தார்.
Hon’ble Prime Minister Shri @narendramodi announced the Next-Generation GST Reforms in his Independence Day address from the ramparts of Red Fort.
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) September 3, 2025
Working on the same principle, the GST Council has approved significant reforms today.
These reforms have a multi-sectoral and… pic.twitter.com/NzvvVScKCF
செய்தியாளர்களிடையே பேசிய நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி வரியை பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் எளிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டதாக கூறினார். இதையடுத்து 2 அடுக்குகளாக ஜிஎஸ்டி வரியை குறைக்க ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
சாமானிய மக்களுக்கான பொருட்களுக்கு, ஜிஎஸ்டி வரி 5%ஆக குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார். அன்றாடம் மக்கள் அனைவரும் பயன்படுத்தும் பொருட்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எந்தெந்த பொருட்களுக்கு வரி குறைப்பு?
உதாரணத்திற்கு, பேஸ்ட், சோப், ஷாம்பு உள்ளிட்ட அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு 5% மட்டுமே வரி வசூலிக்கப்படும். அன்றாட தேவைகளான நெய், வென்னெய், சீஸ் உள்ளிட்டவை மீதான ஜிஎஸ்டி வரிகளும் 12% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.
அதே போல, விவசாய உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரியும், 18% குறைக்கப்பட்டிருக்கிறது. டிராக்டர் உள்ளிட்ட விவசாய உபகரணங்கள் மீதான வரி, 5% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. அனைத்து மோட்டார் வாகன பாகங்களுக்கும், இனி 18% வரி வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நொறுக்கு தீனி வகைகள் , புஜியா, சாஸ்கள், பாஸ்தா, உடனடி நூடுல்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ், வெண்ணெய் மற்றும் நெய் போன்ற வீட்டு உபயோக உணவு பொருட்களுக்கு இனி 5% ஜிஎஸ்டி வரி மட்டுமே. இதற்குமுன் 12%18% என வரி விதிப்பு இனி 5% மட்டுமே என மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார்
ஏசி ,32 இஞ்ச் க்கும் மேல் உள்ள டிவி , பாத்திரம் கழுவும் இயந்திரங்கள் , புரஜெக்டர்கள் போன்றவற்றிற்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில் இனி 18 சதவீத வரி என நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு
எதெற்கெல்லாம் வரியே இல்லை?
நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், படிப்பு சம்பந்தப்பட்ட சில பொருட்களுக்கு வரியே இல்லை. மேப், சார்ட், உலக உருண்டை மாதிரி, பென்சீல், ஷார்ப்னர், க்ரையான்ஸ், பயிற்சி புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவற்றிறு 12% வரை ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டது. அழிப்பானுக்கு 5% வரை வரி வசூலிக்கப்பட்டது. இனி, இவற்றிற்கு வரி இல்லை.
இந்த வரி விலக்குகளும் குறைப்புகளும் வரும் செப்டம்பர் 22 முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ