Women Scheme In India: பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் உரிமைத்தொகையில் ஜூலை மாதத்தில் ரூ.250 கூடுதலாக அளிக்க மத்திய பிரதேச அரசு முடிவெடுத்துள்ளது.
)
Women Scheme In India: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெண்கள் நலன் சார்ந்த திட்டங்களை அந்தந்த மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. மத்திய அரசும் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறது. சமூக ரீதியாகவும், பொருளாதாரா ரீதியாகவும் பெண்கள் சுதந்திரமாக இயங்க மத்திய, மாநில அரசுகள் இந்த திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன எனலாம். அதிலும் பெண்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் செயல்பாட்டில் உள்ளன.
Women Scheme In India: தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimai Thogai Scheme) திட்டத்தை குறிப்பிடலாம். இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 1.15 கோடி குடும்பத்தலைவிகள் மாதந்தோறும் தங்களின் வங்கிக் கணக்கில் ரூ.1000 பெறுகிறார்கள். 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் 15ம் தேதிக்குள் வங்கிக் கணக்கில் வந்துவிடும்.
Women Scheme In India: மத்திய பிரதேசத்தில் 'லாட்லி பெஹ்னா யோஜனா'
இதேபோல், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பெண்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக இந்த பணம் செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்தில் தொகை மட்டும் வேறுபடும் எனலாம். அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் 'லாட்லி பெஹ்னா யோஜனா' என்ற பெண்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Ladli Behna Yojana: மாதந்தோறும் ரூ.1250 கிடைக்கும்...
இத்திட்டத்தில் மத்திய பிரதேச பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1250 வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 10ஆம் தேதியில் இந்த தொகை பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் இணையவதற்கு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவராக அவர் இருக்க வேண்டும். மத்திய பிரதேச அரசின் சமக்ரா அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். சமக்ரா குடும்ப அட்டை, சமக்ரா தனிநபர் அட்டை, ஆதார் அட்டை, ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு, மொபைல் எண் ஆகியவை இத்திட்டத்தில் இணையலாம்.
Ladli Behna Yojana: திட்டத்தின் இணைய என்ன தகுதி வேண்டும்?
மேலும், 'லாட்லி பெஹ்னா யோஜனா' திட்டத்தில் ( Ladli Behna Yojana) இணைய குடும்ப வருமானம் ரூ.2.5 லட்சத்தை மிகாமல் இருக்க வேண்டும். அதேபோல், வருமான வரி செலுத்துவோர் குடும்பத்தினர் இத்திட்டத்தில் இணைய இயலாது. இந்நிலையில், இத்திட்டத்தில் விண்ணப்பித்த பின்னர், cmladlibahna.mp.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ளலாம். இதில் உங்களின் விண்ணப்ப எண் அல்லது தனிநபர் சமக்ரா எண்ணை உள்ளீடு செய்து விண்ணப்ப நிலையை அறியலாம்.
Ladli Behna Yojana: ஜூலை மாதத்தில் கூடுதல் தொகை!
இந்நிலையில், இத்திட்டத்தில் பயனடையும் பெண்களுக்கு மத்திய பிரதேச அரசு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 'ரக்சா பந்தன்' பண்டிகையை முன்னிட்டு பெண்களுக்கு கூடுதலாக ஊக்கத்தொகை வழங்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. அதன் பேரில் வரும் ஜூலை மாதத்தில் மத்திய பிரதேசத்தில் 'லாட்லி பெஹ்னா யோஜனா' திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.27 கோடி பெண்களுக்கு ரூ.250 கூடுதலாக கொடுக்கப்படுகிறது. அதன்படி ஜூலை மாதத்தில் 1500 ரூபாயை மத்திய பிரதேச பெண்கள் பெறுவார்கள். இதுகுறித்த அறிவிப்பை கடந்த வாரம் ஜபல்பூர் அருகே நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ