)
Couple Celebrated Daughters Birth : இந்த காலத்தில் கூட, பெண் பிள்ளைகள் பிறந்தாலே செலவு அதிகம் என்று யோசிக்கும் பெற்றோர் பலர் இருக்கின்றனர். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் பெண் குழந்தை பிறந்தாலே கள்ளிப்பால் ஊற்றிக் கொல்லும் அவலமும் நிகழ்ந்திருக்கிறது. இந்த காலத்தில் அது மாறிவிட்டாலும், பெண் குழந்தை பிறந்தால் அது செலவு வைத்து விடுமோ அல்லது அந்த குழந்தை வளர்ந்து பெரிய பெண் ஆகும் போது பாதுகாப்பாக இருக்குமா? என்கிற சந்தேகம் எல்லா பெற்றோருக்கும் இருக்கிறது. இங்கு ஒரு பெற்றோர் தனக்கு பிறந்த பெண் குழந்தையை மகாராணி போல கொண்டாடி இருக்கின்றர். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
19 வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை…
ஹரியானாவின் ஜிந்த் என்கிற இடத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு வாழும் ஒரு தம்பதி 19 வருடங்களாக குழந்தை இன்றி வாழ்ந்து வந்துள்ளனர். எத்தனையோ முயற்சிகள் செய்தும், அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. தங்களுக்கு குழந்தை பிறக்காது என்று நினைத்த அவர்கள், உறவினர் குழந்தையை கூட தத்தெடுத்து தங்களின் பிள்ளை போல வளர்க்க ஆரம்பித்திருக்கின்றனர். இதையடுத்து அவர்களுக்கு, 19 வருடங்கள் கழித்து ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
பெண் குழந்தை பிறந்ததை ஒட்டி, அவர்கள் அதனை தடபுடலாக ஊரையே கூட்டி திருவிழா போல கொண்டாடியிருக்கின்றனர். அருகில் உள்ள 21 கிராமத்தை சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட 8,000 பேர் இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கின்றனர். ஜூலை மாதம், பல மருத்துவ சிகிச்சைகளுக்கு பிறகு இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை பிறந்ததை, அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதிசயமாக பார்க்கின்றனர். அந்த குழந்தைக்கு அவர்கள் பூமி தேவி என்று பெயர் வைத்திருக்கின்றனர். எப்போதும் ஆண் குழந்தைகளின் பிறப்பைத்தான் பலர் இப்படி கோலாகலமாக கொண்டாடுவர். ஆனால், இங்கு பெண் குழந்தையின் பிறப்பை இப்படி கொண்டாடுவது பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
இது ஏன் முக்கியம்?
ஒரு பெண் குழந்தையின் பிறப்பை கொண்டாடுவதை, ஏன் இவ்வளவு விமரிசையாக கொண்டாடுகின்றனர் என்று பலரும் கேட்டு வருகின்றனர். உண்மையில், இது பாராட்டுக்குரிய விஷயம் என்பது சமூக நல ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. எப்போதும் ஆண் பிள்ளைகளின் பெருமை பேசும் சமூகம், பெண் பிள்ளைகளை ஏனோ பெரும்பாலும் ஒதுக்கித்தான் வைக்கின்றன. அப்படிப்பட்டவர்களுக்கு, இந்த பெற்றோர் செய்துள்ள விஷயம் ஒரு பெரும் பாடமாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ