)
இந்தியாவில் ரயில் போக்குவரத்து முக்கியமானதாகவும், முதன்மையானதாகவும் உள்ளது. பல குடும்பங்கள் ரயில் பயணத்தை தான் விரும்பி மேற்கொள்கின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ரயில் பயணம் தான் இனிமையானதாக அமைகிறது. விமானம், பேருந்து பயணத்தை போலவே பயணிகள் ரயிலில் சில விதிகளை பின்பற்ற வேண்டும். இந்திய ரயில்வே விதிகளின்படி, ஒவ்வொரு பயண வகுப்பிற்கும் ஒவ்வொரு எடை வரம்புகள் உள்ளன. அதற்குள் தான் உடமைகளை கொண்டு செல்ல வேண்டும். இந்த விதிகளை புரிந்துகொள்வது, தேவையற்ற அபராதங்கள் மற்றும் கடைசி நிமிட சிரமங்களை தவிர்க்க உதவும். ஒரு பயணி எவ்வளவு எடை கொண்டு செல்லலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இரண்டாம் வகுப்பு பயணத்திற்கான லக்கேஜ் விதிகள்
நீங்கள் ரயிலில் இரண்டாம் வகுப்பு (Second Class / General Compartment) பெட்டியில் பயணம் செய்தால், உங்களுக்கான லக்கேஜ் வரம்புகள் உள்ளன. அதன்படி, 35 கிலோ எடை வரையிலான உங்கள் உடமைகளை எந்தவித கூடுதல் கட்டணமும் இன்றி நீங்கள் உங்களுடன் எடுத்து செல்லலாம். அதே சமயம் அதிகபட்சமாக எடுத்து செல்லக்கூடிய எடை 70 கிலோ ஆகும். நீங்கள் 35 கிலோவிற்கு மேல், ஆனால் 70 கிலோவிற்கு மிகாமல் உடமைகளை கொண்டு செல்ல விரும்பினால், கூடுதல் எடைக்கு உரிய கட்டணத்தை செலுத்த வேண்டும்.
பிற வகுப்புகளுக்கான வரம்புகள்
இரண்டாம் வகுப்பு மட்டுமின்றி மற்ற வகுப்புகளுக்கும் லக்கேஜ் வரம்புகள் உள்ளன. அதன்படி, படுக்கை வசதி கொண்ட கோச்சில் (Sleeper Class) 40 கிலோ வரை இலவசமாக கொண்டு செல்லலாம். மேலும் 80 கிலோ வரை கட்டணத்துடன் கொண்டு செல்லலாம். ஏசி 3-டயர் மற்றும் ஏசி சேர் காரில் (AC 3-Tier/AC Chair Car) 40 கிலோ வரை உங்களுக்கு இலவசம். மேலும் ஏசி 2-டயரில் (AC 2-Tier) 50 கிலோ வரை இலவசம்; 100 கிலோ வரை கட்டணத்துடன் கொண்டு செல்லலாம். முதல் வகுப்பு ஏசியில் (First AC) 70 கிலோ வரை இலவசம் மற்றும் 150 கிலோ வரை கட்டணத்துடன் கொண்டு செல்லலாம்.
கூடுதல் லக்கேஜை புக் செய்வது எப்படி?
எடையுடன் உங்கள் பெட்டிகள் மற்றும் சூட்கேஸ்களின் அளவுக்கும் வரம்புகள் உள்ளன. பொதுவாக, 100 செ.மீ x 60 செ.மீ x 25 செ.மீ (நீளம் x அகலம் x உயரம்) அளவுள்ள பெட்டிகளை ரயிலில் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. நீங்கள் அனுமதிக்கப்பட்ட இலவச எடையை விட அதிகமாக லக்கேஜ் வைத்திருந்தால், பயணத்திற்கு முன் ரயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகத்திற்குச் (Parcel Office) சென்று, கூடுதல் லக்கேஜை புக் செய்து உரிய கட்டணத்தை செலுத்த வேண்டும். பயணத்தின்போது சோதனையில் பிடிபட்டால், சாதாரண கட்டணத்தை விட ஆறு மடங்கு வரை அபராதம் விதிக்கப்படலாம். எனவே, ரயில் பயணத்தைத் திட்டமிடும்போது, உங்கள் உடமைகளின் எடையைக் கவனித்து, அனுமதிக்கப்பட்ட அளவில் கொண்டு செல்வது உங்கள் பயணத்தை எளிதாகவும், இனிமையாகவும் மாற்றும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ