கடந்த சில ஆண்டுகளில் பதஞ்சலியின் ஆயுர்வேத தயாரிப்புகள் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையில் மிக்கப்பெய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன. பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோரின் தலைமையின் கீழ், பதஞ்சலி நிறுவனம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது, அதுமட்டுமல்லாமல், மக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறையில் நேர்மறையான மாற்றங்களையும் இது கொண்டு வந்துள்ளது.
பதஞ்சலியின் இயற்கைப் பொருட்கள் மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளது?
இன்றைய காலகட்டத்தில், பதஞ்சலி யோகபீடம் அதன் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. பாபா ராம்தேவ் தொடங்கிய இந்த அமைப்பு ஆயுர்வேத சிகிச்சை மற்றும் பாரம்பரிய இந்திய சுகாதார முறையை ஊக்குவிக்க உதவுகிறது. பதஞ்சலியின் நோக்கம் மருந்துகள் அல்லது பொருட்களை விற்பனை செய்வது மட்டுமல்ல, சமநிலையான மற்றும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதும் ஆகும். இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், மக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. ஆனால் பதஞ்சலியின் இலக்கு மக்களை இயற்கையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்வதே ஆகும்.
பதஞ்சலியின் இயற்கைப் பொருட்களின் சிறப்பு என்ன?
பதஞ்சலி தயாரிப்புகளின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், அவை இயற்கை மற்றும் கரிம பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. பதஞ்சலி நிறுவனம் தனது தயாரிப்புகளில் ரசாயனங்களை ஒருபோதும் பயன்படுத்துவதில்லை. இதன் காரணமாக நுகர்வோர் இயற்கையான மற்றும் பாதுகாப்பான சிகிச்சையைப் பெறுகின்றனர். ஆயுர்வேத மூலிகைகள் மற்றும் இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி, பதஞ்சலி தனது தயாரிப்புகளை இன்னும் சிறப்பாக்கியுள்ளது.
இன்றைய நவீன மருத்துவ முறையில், மருந்துகள் கொடுப்பதன் மூலம் நோய்கள் பெரும்பாலும் குணமாகிறது. ஆனால் பதஞ்சலி ஆயுர்வேதம் உடல் மற்றும் மனம் என ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துகிறது. இந்த சுகாதார அமைப்பு இயற்கை சிகிச்சைகள், மூலிகைகள் மற்றும் சீரான வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டுள்ளது, இது உடல் நோய்களைக் குணப்படுத்துவது மட்டுமல்லாமல் மன அமைதி மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கிக்க உதவுகிறது.
பண்டைய அறிவின் நவீன பயன்பாடு:
பதஞ்சலி ஆயுர்வேதத்தின் பண்டைய மரபை இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்துள்ளார் என்பதை இப்போது பார்ப்போம். யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் இன்றைய காலக்கட்டதிற்கு ஏற்ப ஆயுர்வேதத்தை மாற்றி உருவாக்கியுள்ளனர். ஆயுர்வேதத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த பிராண்ட், அதன் பயனுள்ள மற்றும் இயற்கை சிகிச்சைகள் மூலம் முழுமையான சிகிச்சைக்கான நம்பகமான விருப்பத்தை வழங்குகிறது.
யோகா மற்றும் வாழ்க்கை முறை மூலம் ஏற்படும் மாற்றங்கள்:
பதஞ்சலியின் மிகப்பெரிய பங்களிப்பு, யோகாவை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றியமைத்ததாகும். யோகா வெறும் உடல் பயிற்சி மட்டுமல்ல இது தவிர, இது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் சமநிலையைக் கொண்டுவரும் ஒரு ஆன்மீகப் பயிற்சியாகும்.
யோகா குரு பாபா ராம்தேவின் இலவச யோகா முகாம்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான மக்களை யோகாவின் சக்தியுடன் இணைத்து, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தூண்டியுள்ளன. இந்த யோகா முகாம்களில் மக்கள் ஆசனங்கள் மற்றும் பிராணாயாமத்தை மட்டும் கற்றுக்கொள்வதில்லை, மாறாக ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் தினசரி வழக்கங்கள் பற்றிய தகவல்களையும் பெறுகின்றனர்.
மேலும் படிக்க | ஆரோக்கியத்தை எளிதாகவும் இயற்கையாகவும் மீட்டெடுக்க பதஞ்சலி யோகா டெக்னிக்
மேலும் படிக்க | சர்வதேச யோகா தினம்... உலகளாவிய இயக்கமாக மாற உதவிய பதஞ்சலி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









