)
Petrol Diesel Price: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்காக அமெரிக்கா இந்தியாவின் மீது கடும் பொருளாதார நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது எனலாம். அதாவது, அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதிக்கு 25% வரி விதிப்பும், கூடுதலாக 10% அபராதமும் விதித்து ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இதை அமல்படுத்துவதாக டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.
அமெரிக்காவின் இந்த கடுமையான நடவடிக்கை இந்தியாவின் பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் செலவு 9-11 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அதாவது, ரூ.9.60 லட்சம் கோடி அளவில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
உலகிலேயே அதிகமாக கச்சா எண்ணெய்யை பயன்படுத்தும் நாடும், இறக்குமதி செய்யும் நாடும் இந்தியாதான். அப்படியிருக்க, கடந்த 2022ஆம் ஆண்டு முதல் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து அதிகம் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. 2022 பிப்ரவரியில் ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியது. அதற்கு முன் வரை இந்தியா வெறும் 0.2% மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை பெற்று வந்தது, ஆனால் தற்போது 35-40% ஆக உயர்ந்துள்ளது.
அதாவது ரஷ்யாவிடம் இருந்து மிக குறைந்த விலையில் இந்தியா கச்சா எண்ணெய்யை பெற்று வந்தது. இது பொதுமக்களும், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் லாபம் பார்த்து வந்தனர், ஆனால் அமெரிக்காவின் தற்போதைய அறிவிப்பு அதில் மண் அள்ளி போட்டுட்டுள்ளது.
அமெரிக்காவின் கடுமையான கட்டுப்பாடுகளால், இந்தியா ஒருவேளை ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தினால் பேரலுக்கு 5 அமெரிக்க டாலர் அதிகமாக செலவிட வேண்டும். இந்தியா தினமும் 1.8 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்கிறது. இதனால், ஓராண்டில் இந்தியா கச்சா எண்ணெய்க்கு செலவிடும் தொகை 9-11 பில்லியன் அமெரிக்க டாலருக்கு உயரும். உலகளவில் கச்சா எண்ணெய்யின் விலையும் உயர்ந்தால் இந்த செலவு இன்னும் அதிகமாகும்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவில் Nayara Energy, Reliance Industries போன்ற நிறுவனங்கள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கின்றன. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் பெறுவதால் Nayara நிறுவனம் மீது ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கெனவே பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது, தற்போது அமெரிக்காவும் கறார் காட்டும் சூழலில், இந்த நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து ஒதுங்கிக் கொள்ள வாய்ப்புள்ளது.
இதனால், இந்தியா ரஷ்யாவுக்கு பதில் மத்திய கிழக்கு நாடுகள், மேற்கு ஆப்பிரிக்கா நாடுகள் அல்லது அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கியாக வேண்டும். இவை ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை விட விலை அதிகமாகும். சரக்கு கையாள்வதில் இருந்து பல பிரச்னை இருக்கின்றன, கச்சா எண்ணெய்யின் தரமும் வேறுபடும்.
இந்தியா ரஷ்யாவை விடுத்து வேறு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை பெறுவதால் செலவு அதிகரிக்கும் சூழலில், பெட்ரோல் - டீசல் விலையை கட்டுக்குள் வைக்க வரி குறைப்பு மற்றும் மானியத்தை தொடர்ந்து வழங்குவது உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும். ஆனால், இந்திய அரசுக்கு நிதி பற்றாக்குறை அதிகரிக்கும். ஒருவேளை கச்சா எண்ணெய்யின் சந்தை விலைக்கு பெட்ரோட், டீசல் விலையை நிர்ணயம் செய்தால் நிச்சயம் இரண்டின் விலையும் ரூ.200 தாண்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பணவீக்கம், இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பொருளாதார பிரச்னைகளும் அதிகரிக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ