பாகிஸ்தானை மண்டியிட வைத்த பிரம்மோஸ் ஏவுகணை... பேரழிவை சந்தித்த இராணுவ தளங்கள்!

இந்தியா கொடுத்த பதிலடியில், வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நிகழ்வாக, மே 10 ஆம் தேதி தொடக்கத்தில், முக்கிய பாகிஸ்தான் இராணுவ உள்கட்டமைப்புக்கு எதிரான ஒருங்கிணைந்த, துல்லியமான தாக்குதலின் ஒரு பகுதியாக, தனது பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை போரில் பயன்படுத்தியது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 11, 2025, 04:32 PM IST
  • போர் சூழ்நிலையில் இந்தியா முதல் முறையாக பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையைப் பயன்படுத்தியுள்ளது.
  • ராணுவ தளங்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டுள்ளதாக தெளிவுபடுத்தியுள்ள இந்திய ராணுவம்.
  • எதிரி பிரதேசத்திற்குள் உள்ள முக்கியமான விமானத் தளங்கள் மற்றும் ரேடார் தளங்கள் அழிக்கப்பட்டன.
பாகிஸ்தானை மண்டியிட வைத்த பிரம்மோஸ் ஏவுகணை... பேரழிவை சந்தித்த இராணுவ தளங்கள்!

இந்தியா மே 6-7 இரவு ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தைத் தொடங்கியது. இதன் கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 பயங்கரவாத மறைவிடங்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது. இது பாகிஸ்தானின் ஆதரவின் கீழ் வளர்க்கப்பட்ட பயங்கரவாதிகளின் கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டன. இதனால், பாகிஸ்தான் ஆத்திரமடைந்து, இந்தியா மீது பல ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இந்தியாவின் தரப்பிலிருந்து பழிவாங்கும் நடவடிக்கையும் முடிவு செய்யப்பட்டது. இந்திய விமானப்படை பாகிஸ்தானின் விமான தளங்கள், வெடிமருந்து கிடங்குகள் மற்றும் கட்டளை மையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பல விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. 

Add Zee News as a Preferred Source

இந்தியா கொடுத்த பதிலடியில், வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நிகழ்வாக, மே 10ம் தேதி தொடக்கத்தில், முக்கிய பாகிஸ்தான் இராணுவ உள்கட்டமைப்புக்கு எதிரான ஒருங்கிணைந்த, துல்லியமான தாக்குதலின் ஒரு பகுதியாக, தனது பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை செயலில் போரில் பயன்படுத்தியது. வேகம், துல்லியம் மற்றும் பல்துறைத்திறனுக்கு பெயர் பெற்ற பிரம்மோஸ் ஏவுகணை கொண்ட நடத்தப்பட்ட தாக்குதலில்,  எதிரி பிரதேசத்திற்குள் உள்ள முக்கியமான விமானத் தளங்கள் மற்றும் ரேடார் தளங்கள் அழிக்கப்பட்டன. இது பாகிஸ்தானின் வான் பாதுகாப்பை தகர்த்ததோடு மட்டுமல்லாமல், துல்லியமான இலக்குடன், பாகிஸ்தான் விமானத் தளத்தையும் அழித்தது.

சனிக்கிழமை அதிகாலையில் பாகிஸ்தானின் பல முக்கிய விமானப்படை தளங்கள் மீது இந்தியா சர்ஜிக்கல் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதலில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை, SCALP மற்றும் HAMMER போன்ற நவீன வான்வழித் துல்லிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உண்மையான போரில் பிரம்மோஸ் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. பதிலடி தாக்குதலில், தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தானின் இராணுவத்தின் முக்கியத்துவம் இலக்குகளான ரஃபிகி (ஷோர்கோட்), முரித் (சக்வால்), நூர் கான் (சக்லாலா), ரஹீம் யார் கான், சுக்கூர், சுனியன் (கசூர்), ஸ்கர்டு, போலாரி, ஜகோபாபாத் மற்றும் சர்கோதா ஆகிய விமான தளங்களும், பஸ்ரூர் மற்றும் சியால்கோட்டில் உள்ள ரேடார் நிலையங்களும் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளும் தகர்க்கப்பட்டன.

போர் சூழ்நிலையில் இந்தியா முதல் முறையாக பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையைப் பயன்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனுடன், HAMMER (Highly Agile Modular Munition Extended Range) மற்றும் SCALP ஏவுகணைகளும் இந்தத் தாக்குதலின் ஒரு பகுதியாக இருந்தன. இந்த ஆயுதங்கள் அனைத்தையும் இந்திய விமானப்படையின் ரஃபேல் போர் விமானங்களிலிருந்து ஏவ முடியும்.

கீழ்கண்ட இடங்கள் இந்தியா தாக்கிய பாகிஸ்தான் விமானப்படை தளங்களில் அடங்கும்.

1. ஜாங் மாவட்டத்தின் ஷோர்கோட்டில் அமைந்துள்ள ரஃபிக் விமானப்படை தளத்தில் இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் மிக நவீன போர் விமானப் படைகள் நிறுத்தப்பட்டுள்ள இடம்.

2. பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் UAV தளங்கள் அமைந்துள்ள சக்வாலில் உள்ள முரித் விமானப்படை தளத்தின் மீது இந்தியா ஏவுகணையை ஏவியது.

3. ராவல்பிண்டியின் சக்லாலாவில் அமைந்துள்ள நூர் கான் விமான தளம் குறிவைக்கப்பட்டது. பாகிஸ்தானின் ஏர் மொபிலிட்டி கமாண்ட், எரிபொருள் நிரப்பும் வாகனங்கள் மற்றும் கனரக போக்குவரத்து விமானங்கள் இங்கு அமைந்துள்ளன.

4. ரஹீம் யார் கான் விமான தளம், அதிகாரப்பூர்வமாக ஷேக் சயீத் சர்வதேச விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இது பஞ்சாப் மாகாணத்தின் ரஹிம் யார் கான் நகரில் அமைந்துள்ள ஒரு முக்கிய விமான நிலையமாகும்.

5. ஸ்கர்டு மற்றும் போலாரி மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த விமானப்படை தளம் பாகிஸ்தானுக்கு மூலோபாய ரீதியாக மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

6. இது தவிர, ஜகோபாபாத் மற்றும் சர்கோதாவிலும் இந்தியா தாக்குதல் நடத்தியது. அதே நேரத்தில், பஸ்ரூர் மற்றும் சியால்கோட்டின் ரேடார் தளங்களும் துல்லியமான வெடிமருந்துகளால் அழிக்கப்பட்டன.

இராணுவ தளங்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாக கூறிய இந்திய ராணுவம்

இந்திய ராணுவம் தனது அறிக்கையில் ராணுவ தளங்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டுள்ளதாக தெளிவுபடுத்தியுள்ளது. அதேசமயம் பாகிஸ்தான் பல தவறான பிரச்சாரங்களை நடத்தியது. இந்திய விமானப்படை இது குறித்து தெளிவுபடுத்துகையில், பாகிஸ்தானின் இராணுவ இலக்குகள் முன்கூட்டியே அடையாளம் காணப்பட்டன. அவை பாகிஸ்தானின் இராணுவ வசதிகளாக இருந்தன. இதில் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், ரேடார்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் ஆகியவை அடங்கும். இந்த மறைவிடங்கள் அனைத்தும் பாகிஸ்தான் எல்லைக்குள் ஆழமாக அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இது வரை இல்லாத அளவிற்கு, பாகிஸ்தானிற்குள் சென்று இந்தியா தாக்கியுள்ளதால் பேரழிவை சந்தித்த பாகிஸ்தான் அடிபணியும் நிலை ஏற்பட்டது.

மேலும் படிக்க | 'பாகிஸ்தான் அத்துமீறியது உண்மை' - இந்தியாவின் பெரிய எச்சரிக்கை... அடுத்தது என்ன?

மேலும் படிக்க | எல்லை பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்... எல்லை உள்ள பல நகரங்களில் பிளாக் அவுட் அமல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News