)
Is Extra Marital Affair Legal In India : இந்தியாவின் பல்வேறு பகுதிகளை ஆண்ட ராஜாக்கள், ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்து கொண்டிருப்பதை பார்த்திருப்போம். ராஜாக்கள் மட்டுமல்ல, சாமானியர்களும் கூட இப்படி இருப்பர். காலம் மாறுகையில் திருமணம் தாண்டிய உறவுகளும் வெவ்வேறு பரிமாணங்களை பெற்றன. நம் ஊரிலேயே கூட பலர் இப்போது தனக்கென்று இருக்கும் உறவைத்தாண்டி, இன்னொரு உறவை தேடிச்செல்வதை சமீப காலங்களாக பார்க்க முடிகிறது. சமீபத்தில், பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் ஆகியிருக்கும் போதே ஜாய் கிரிஸில்டா எனும் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், இது போன்று விவாகர்த்திற்கு முன்பே இன்னொருவர் திருமணம் செய்து கொண்டால், அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் என்னென்ன இருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம்.
இந்தியாவும் கள்ள உறவுகளும்…
இந்தியாவைப் பொறுத்தவரை கள்ள உறவுகள் என்பது அடிக்கடி நிகழும் ஒரு விஷயம் ஆகிவிட்டது. கணவன் மனைவி இடையே நம்பிக்கையால் வளரும் உறவு, இந்த விஷயத்தை ஒரேடியாக பிளவுபட தெரிய வாய்ப்பிருக்கிறது.
இந்தியாவில் திருமணத்தை தாண்டிய உறவுகள் ஆங்கிலத்தில் adultery என்று அழைக்கப்படுகிறது. உச்ச நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டில் திருமணத்தை தாண்டிய உறவினை குற்றமற்றதாக்கியது.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 497 அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறி இந்த தீர்ப்பானது வழங்கப்பட்டது. இது ஒரு குற்றம் இல்லை என்றாலும், விவாகரத்துக்கு வலுவான இதைக் கூறி பிரியலாம். அதுமட்டுமன்றி ஜீவன் வம்சம் பெறுவது மற்றும் குழந்தைகளின் கஸ்டடி எடுத்துக் கொள்வது ஆகியவற்றிலும் இது பெரும் பங்கு வகிக்கும்.
கள்ள உறவு ஏற்படுத்தும் பாதிப்புகள்:
காதல் ஆனாலும், திருமணம் ஆனாலும், அந்த உறவு நம்பிக்கையின் அடிப்படையில் வளரும் ஒரு விஷயமாகும். இதில் மனைவி உண்மையானவராகவும் கணவனுக்கு உண்மையானவராகவும் இருக்கிறார் எனும் பட்சத்தில், கணவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்து கொண்டு, இவருக்கு துரோகம் செய்கிறார் என்றால் அது பெரும் நம்பிக்கையின்மையை வளர்த்து விடும். இதே நிலைதான், மனைவியானவர் கணவனுக்கு துரோகம் இழைத்தாலும் நேரும்.
இந்த கள்ள உறவு, ஒரு குடும்பத்தையே சிதைப்பதோடு, பல சமயங்களில் உறவில் இருக்கும் இன்னொரு நபரையும் மொத்தமாக பாதிக்கிறது. அவர்கள், தங்களிடம் எதுவோ பிரச்சனை என்று நினைத்துக்கொண்டு, தன் சுயத்தையே கேள்வி கேட்டுக்கொள்வர்.
சர்ச்சையை ஏற்படுத்திய தீர்ப்பு!
கள்ள உறவு தவறு இல்லை என்பது குறித்த தீர்ப்பு, இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. செப்டம்பர் 27ஆம் தேதி, 2018ஆம் ஆண்டு வரை இந்திய தண்டனைச் சட்டம் (IPC) திருமணத்தை தாண்டி உறவை தண்டனைக்குரிய குற்றமாக கருதியது. இதற்கு அர்த்தம், திருமணமான ஒரு ஆண் தனது மனைவி அல்லாத திருமணமான பெண்ணுடன் சம்மதத்துடன் உடலுறவு கொண்டால் சிறைத்தண்டனை பெறலாம் என்பதுதான்.
இப்போதைய நிலை என்ன?
2018 ஆம் ஆண்டு வந்த நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, திருமணத்தை தாண்டிய உறவுகள் இந்தியாவில் குற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு அர்த்தம், ஒருவர் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்தால் அவரை சிறையில் அடைக்க முடியாது. இருந்தாலும், திருமண உறவில் இந்த விஷயம் பல குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, இந்தியாவில் பொருந்தக்கூடிய திருமண சட்டங்களின் கீழ், விவாகரத்து கோருவதற்கு திருமணத்தை தாண்டி உறவு செல்லூபடியாகும்.
இது, அதிக ஜீவனாம்சம் பெறவும், சொத்துக்களை பிரிப்பதற்கும், குழந்தையை யார் வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்வதை தீர்மானிக்கவும் உதவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ