)
Gold Jackpot For India: இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் தங்கச் சுரங்கங்கள் பெருமளவு கண்டறியப்பட்டுள்ளன. முதல் கட்ட மதிப்பீட்டின்படி, 10–20 மெட்ரிக் டன் (10,000–20,000 kg) தங்கம் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்தியாவுக்கு முக்கியமான மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI), ஒடிசா மாநிலத்தில் பல மாவட்டங்களில் பெரிய அளவில் தங்கச் சுரங்கங்கள் இருப்பதை அறிவித்துள்ளது.
முதல் கட்ட மதிப்பீட்டின்படி, 10 முதல் 20 மெட்ரிக் (10,000-20,000 கிலோ) டன் வரை தங்கம் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்த தங்கம் தேவ்கர், கோஞ்சர், சுந்தர்கர், நவரங்கபூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு இந்தியாவின் சுரங்கத் துறைக்கும், பொருளாதாரத்திற்கும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தங்க உற்பத்தி அதிகரித்தால், நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதார நிலைக்கும் நல்ல பலன் கிடைக்கும் என்பது கணிப்பு.
இதே நேரத்தில், இந்த சுரங்கங்களை பயன்படுத்தும்போது சுற்றுச்சூழல் பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த பெரிய கண்டுபிடிப்பு இந்தியாவின் தங்கச் சுரங்க வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.
சுருக்கமாக:
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ