ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்.. 25 பேர் பலி!

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலால் சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.   

Written by - R Balaji | Last Updated : Apr 22, 2025, 10:49 PM IST
  • ஜம்மு காஷ்மிரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
  • இந்த கொடூர தாக்குதலில் சுமார் 25 பேர் பலி ஆகியுள்ளனர்
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்.. 25 பேர் பலி!

தெற்கு காஷ்மீரான பகல்காமில் இன்று (ஏப்ரல் 22) தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் பலர் காயமடைந்த நிலையில், சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளனர். சுற்றுலா தளமான பகல்காமில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

பிரதமர் மோடி கண்டனம்: இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது கண்டனத்தை தெரிவித்த அவர், ஜம்மு - காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டிக்கொள்கிறேன். 

இந்த கொடூர தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. அவர்களின் தீய எண்ணம் ஒருபோதும் வெற்றி பெறாது. பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கான நமது தீர்மானம் அசைக்க முடியாதது, அது மேலும் வலுவடையும் என கூறி உள்ளார். அதேபோல் குடியரசு தலைவர் திரவுபதி, அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது மிகவும் கொடூரமானது மற்றும் மன்னிக்க முடியாதது என கூறியுள்ளார். 

தமிழக முதல்வர் கண்டனம்: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது, ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், பல விலைமதிப்பற்ற உயிர்களைப் பலிகொண்டது, மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு காட்டுமிராண்டித்தனமான செயலாகும். இது மிகவும் கடுமையான கண்டனத்திற்கு உரியது. எனது எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன.

பாதிக்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். ஜம்மு காஷ்மீர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உறுதி செய்யுமாறு டெல்லியில் உள்ள குடியிருப்பு ஆணையரை நான் உத்தரவிட்டுள்ளேன் என கூறி உள்ளார். 

தாக்குதலின் பின்னணி

பகல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் இன்று பிறபகல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிக்கு கால்நடையாகவோ அல்லது குதிரை மூலமாகவோ மட்டுமே செல்ல முடியும் என கூறப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது. 

தாக்குதலை நடத்தியவர்களை பாதுகப்பு படையினர் தேடி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிக்கும் இந்த சமயத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிங்க: தங்கம், வெள்ளி இல்லை! வரும் காலத்தில் இந்த உலோகம் தான் அதிக விலையில் இருக்கும்!

மேலும் படிங்க: கன்னடரை தாக்கிவிட்டு கொல்கத்தாவில் விமானப்படை அதிகாரி தலைமறைவு.. பெங்களூருவில் பரபரப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News