)
Jammu Hit And Run Shocking CCTV : பிசியான ராேட்டில் பிரேக் பிடித்து வண்டி ஓட்டுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. நாம் எவ்வளவு பொறுமையாக பார்த்து பார்த்து ஓட்டினாலும், வண்டியை ஆபத்தான முறையில் ஓட்டும் சில அறிவாளிகளால் நாம் அடிபடக்கூடும். இந்த விபத்துகள் பல சமயங்களில் மரணத்திற்கும் பலரையும் இழுத்து செல்வதுண்டு. தற்போது, அப்படிப்பட்ட வீடியோக்களுள் ஒன்றுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகி வரும் இந்த சிசிடிவி காட்சி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, மதியம் 1.30 மணியளவில் படமாக்கப்பட்டுள்ளது. இதில், டெல்லியின் காந்தி நகர் பகுடியில் இருந்து கிரீன் பெல்ட் பார்க் செல்லும் வழியில், ரோட்டில் ஒரு ஜீப் வடிவ காரும், வெள்ளை நிற காரும் வேகமாக வருகின்றன. இதற்கு எதிரில், 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வருகிறார். வந்த வேகத்தில் அவர் அந்த இரு கார்களுக்கும் இடையே மாட்டிக்கொள்கிறார். இதில், அந்த கருப்பு நிற ஜீப், அவரது வண்டியை லேசாக இடித்துவிட்டு செல்கிறது. இதனால் வண்டியில் இருந்து நிலை தடுமாறி கீழே விழும் அந்த நபர், எழுந்து நின்று அந்த காரையே பார்த்துக்கொண்டிருக்கிறார்.
Shocking Hit-and-Run in Jammu!
— Komal Singh Manhas | News 18 (@KomalSinghN18) July 28, 2025
A speeding Thar mowed down an elderly man on a scooter and ran over him again. Caught on CCTV, the brutal act has left locals outraged.
Is the Thar becoming a symbol of fear instead of status? #Jammu #HitAndRun @OfficeOfLGJandK@JmuKmrPolice pic.twitter.com/PMzedIipde
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், அந்த ஜீப் வடிவ கார் ஆனது, வேகமாக ரிவர்ஸில் வந்து நின்று கொண்டிருந்த அந்த நபர் மீது மோதி கீழே தள்ளுகிறது. இடித்த வேகத்தில் அந்த முதியவர் 5 அடி தள்ளிப்போய் விழுகிறார். அதிலிருந்து, இறங்கும் இளைஞர் ஒருவர், கீழே விழுந்து கிடக்கும் நபரிடம் சென்று கையை “கொண்ட்ருவேன்” என்பது போல சைகை காண்பித்துவிட்டு, காரில் பந்தாவாக ஏறி செல்கிறார். ஒருவரை இடித்ததோடு மட்டுமன்றி, ரிவர்ஸில் வந்து காயத்தை ஏற்படுத்தி விட்டு, இறங்கி வந்து ஒருவர் மிரட்டல் விடுத்தது என்பது பார்ப்பவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவத்தையடுத்து, ஜம்மு சிட்டியில் இருக்கும் ஒரு நபர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருக்கின்றனர். அவரை இடித்த அந்த கார், மகேந்திரா தார் என்று கூறப்படுகிறது. போலீஸார் அவர் மீது 281, 109 மற்றும் 125 (ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். அந்த காரின் ஓனரை கைது செய்ததோடு, காரையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். இந்த சம்பவத்தை செய்தது, ஓனர் அல்ல டிரைவர் என்று தெரிய வந்துள்ளது. அவர் இப்பாேது வரை காவல்துறையின் கைகளில் சிக்காமல் தலைமறைவாகி இருக்கிறாராம்.
விபத்தை ஏற்படுத்திய இளைஞரின் பெயர், மனான் ஆனந்த். இவர், நனாக் நகர் எனும் இடத்தில் வாழ்ந்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். அடிப்பட்ட நபரை, ஜிஎம்சி மருத்துவமனைக்கு அருகில் இருந்தவர்கள் அழைத்து சென்றுள்ளனர். இடித்தவுடன் அந்த நபர் மிரட்டி விட்டு உடனடியாக அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஜம்மு நகர காவல் துறையினர் அந்த நபரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ