)
Jharkhand Crime News: நாள்தோறும் நடக்கும் கொலை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கொடூரமான முறையில் பெண்கள் என பலரும் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். கொலை சம்பவங்களை தடுக்க அரசு பல நடவடிக்கை எடுத்தாலும், தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது, மாந்திரீகத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், தாயை அவரது மகன் கொலை செய்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் தும்காவில் உள்ள பத்ரா திகா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் அக்டோபர் 28 ஆம் தேதி நடந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட 41 வயதான நபர் தனது தாய் முனி சோரனை கத்தியால் குத்தியாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அவர் தும்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து, அவர் சிகிச்சை பலனின்றி மூதாட்டி நேற்றுமுன் தினம் உயிரிழந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் நேற்று (நவம்பர் 2) மதுபனில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதாக கோபிகந்தர் காவல் நிலையப் பொறுப்பாளர் சுமித் பகத் பிடிஐயிடம் தெரிவித்தார். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியும் மீட்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் ரம்ஜன் ஹெம்பிராம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் தாய் முனி சோரன் மாந்திரீகத்தில் ஈடுபடுவதாக அவரது மகன் சந்தேகித்தார். இதனால், தனது தாயுடன், அந்த நபர் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார். இதனால், தனது மகனின் தொடர்ச்சியான தாக்குதல்களில் இருந்து தப்பிக்க கடந்த சில மாதங்களாக திகாவில் உள்ள தனது மருமகளின் மாமியார் வீட்டில் வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் மகள் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனது சகோதரர் ரம்ஜன் ஹெம்பிராம் தான் இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்பதை உறுதிப்படுத்தினார். சில மாதங்களுக்கு முன்பு தீராத நோயால் பாதிக்கப்பட்டு இறந்த தனது மகளைக் கொல்ல தனது தாயார் மாந்திரீகம் செய்ததாக ரம்ஜன் சந்தேகித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த நாளில், குற்றம் சாட்டப்பட்டவர் அதிக அளவு மது அருந்தியதாகவும், பின்னர் கிட்டத்தட்ட 15 கிலோமீட்டர் தூரம் பயணித்து திகா கிராமத்திற்குச் சென்றதாகவும், அங்கு தனது தாயாரை கத்தியால் தாக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாந்திரீகத் தடுப்புச் சட்டம், 2001 குறித்த விழிப்புணர்வு அமர்வை தொலைதூர கிராமங்களில் நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அடர்ந்த காடுகளில் அமைந்துள்ள கிராமங்களில் விழிப்புணர்வு முகாம்களை நடத்த மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக போலீசார் கூறினர். மேலும் இந்த கிராமங்கள் கல்வியறிவின்மை அதிகமாக இருப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ