)
Karur Vijay Rally Stampede: தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் நடந்த டிவிகே கட்சி பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை பாஜக தீவிரமாகக் கருதுகிறது. பலர் காயமடைந்தனர் மற்றும் 41 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. சம்பவ இடத்தைப் பார்வையிடவும், நிலைமையை மதிப்பிடவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்கவும் அவர் எட்டு பேர் கொண்ட NDA-BJP நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா அமைத்துள்ளார். எதற்கு பாஜக சார்பில் எட்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது? அந்த குழுவில் யார் யாரெல்லாம் இடம் பெற்றிருக்கிறார்கள்? போன்ற விவரங்களை தெரிந்துக்கொள்ளுவோம்.
செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நடிகர் விஜயை பார்ப்பதற்காக பலரும் அங்கே வந்த நிலையில், அந்த பொதுக்கூட்டம் நெரிச்சலில் சிக்கி பலரும் உயிரிழந்திருக்கிறார்கள். சுமார் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரூரில் நடைபெற்ற தவெக பொதுக் கூட்டத்தின் போது, மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், ஒரு துயர சம்பவம் நிகழ்ந்தது. கூட்ட நெரிசலில் பலர் சிக்கிக் கொண்டனர், இதன் விளைவாக குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர் என அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் உறுதி செய்யப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா, "தமிழ்நாட்டில் கரூரில் டிவிகே கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிச்சலில் பலர் உயிரிழந்த துயர சம்பத்தில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு, காயமடைந்தர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என்று பிராத்தனை செய்வதாகத் தெரிவித்திருக்கிறார்.
இந்த துயர சம்பவம் எவ்வாறு ஏற்பட்டது என்பதை ஆராயவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் மற்றும் விரைவில் அறிக்கை அளிக்க வேண்டும் என எட்டு பேர் கொண்ட குழுவை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அமைத்திருக்கிறார். அதாவது தேசிய குழுவை அமைத்திருக்கிறார். அந்த குழுவில் பாஜக, சிவசேனா, தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அந்த குழுவில் எம்பி அனுராக் தாக்கூர், எம்பி தேஜஸ்வி சூர்யா, எம்பி ஹேமா மாலினி, எம்பி ரேகா சர்மா, எம்பி பிரஸ் லால், எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே, எம்பி அப்ரஜிதா சரங்கி, எம்பி புத்த மகேஷ் குமார் என எட்டு பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறார். இந்த குழு விரைவில் கரூர் சென்று அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, ஆறுதல் கூறுவார்கள். அதன்பிறகு இந்த சம்பவம் எப்படி நடந்தது? நேரில் விசாரித்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க இருக்கிறார்கள்.

தற்போது எட்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதாக பாரதிய ஜனதா கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே மத்திய அமைச்சர்கள் கரூரில் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து, ஆறுதல் கூறியும் அங்குள்ள நிலவரங்கள எல்லாம் கேட்டு அறிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தலைமையிலான இந்தக் குழுவில் பாஜக, சிவசேனா மற்றும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பார்வையிடுவது, ஆறுதல் கூறுவது மற்றும் சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்த அறிக்கையை சமர்ப்பிப்பது இந்தக் குழுவின் நோக்கமாகும். இந்த சம்பவத்தில் கூட்ட நெரிசல் காரணமாக குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். பாஜக இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது, மேலும் நிலைமையை மதிப்பிடுவதற்கும் தகவல்களைச் சேகரிப்பதற்கும் குழுவை அனுப்பியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ