பகல்காம் தாக்குதல்: பயங்கரவாத தாக்குதலை நேரில் கண்ட குடும்பம்

பால்டியில் வசிக்கும் ரிஷி பட்டின் குடும்பத்தினர் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நேரில் கண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 28, 2025, 08:33 PM IST
  • ஜம்மு காஷ்மீரின் பகல்காம் நகரில் நடந்த தாக்குதல்
  • இந்த பயங்கரவாதிகள் 10 முதல் 12 அடி தூரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
  • ந்திய இராணுவம் சிறப்பாகச் செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பகல்காம் தாக்குதல்: பயங்கரவாத தாக்குதலை நேரில் கண்ட குடும்பம்

Pahalgam Attack: ஜம்மு காஷ்மீரின் பகல்காம் நகரில் உள்ள பைசரன் புல்வெளி பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்தனர், பலரும் படுகாயம் அடைந்தனர். குடும்பத்தினர் கண் முன்னே ஒவ்வொருவராக சுட்டு கொலை செய்தனர். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நடந்த இந்த கொடூர கொலைவெறி தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினர் கண் முன்னே இறக்க வேண்டி நேரிட்டது. மனைவி, தாய், சகோதரி என பெண்கள் தங்களின் நெருங்கிய உறவுகளை இழந்து தவித்த கொடூர காட்சிகள் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியைடைய வைத்துள்ளது.

இந்த பயங்கரவாத சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பது மட்டுமின்றி பயங்கரவாத செயல்களை கண்டித்தும் குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன. இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றம் நிலவி வருகின்றனது. 

நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இந்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலை கண்டித்திருக்கும் அதேநேரத்தில் நாட்டின் எல்லைப் பகுதிகள் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் பாரமுல்லாவில் 2  பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து சுட்டு வீழ்த்தினர். தீவிரவாதிகளை இடைமறித்தபோது அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், ராணுவம் கொடுத்த பதில் தாக்குதலில் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பால்டியில் வசிக்கும் ரிஷி பட்டின் குடும்பத்தினர் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நேரில் கண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

SGMD மண்டப அலங்கார தொழிலதிபர் ரிஷி பட் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்குதல் நடந்த போது பகல்காமில் இருந்ததாக கூறியுள்ளனர். மேலும் தாக்குதல் நடந்தபோது ரிஷி பட் ஜிப்-லைனிங் செய்து கொண்டிருந்தாராம். ஜிப் லைனை ரசித்துக் கொண்டிருந்தபோது பயங்கரவாதத் தாக்குதல் வீடியோவில் படம்பிடிக்கப்பட்டது.

இந்த பயங்கரவாதிகள் 10 முதல் 12 அடி தூரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. ஜிப் லைனில் அவர்களுக்கு முன்னால் சென்ற இரண்டு குடும்ப உறுப்பினர்கள் இந்த தாக்குதலில் இறந்தனர். இதில் அங்கிருந்த சில பயங்கரவாதிகள், அவர்களின் மதத்தைக் கேட்டு மக்களைக் கொன்றதாக ரிஷி பட் கூறியுள்ளார்.

மேலும் கூறிய அவர் தான் நடுவில் ஜிப் லைனில் இருந்து குதித்து ஓடிவிட்டதாகவும்,  அவரது மனைவியும் மகனும், மூவரும் சம்பவ நடந்த இடத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளார். இவர்கள் தாக்குதலில் இருந்து தப்பிக்க நிலப்பரப்பில் சிறிது நேரம் ஒளிந்து கொண்டதாக கூறினர். இதன் பிறகு அங்கிருந்து தப்பி தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். மேலும் அங்கிருந்த இந்திய இராணுவம் சிறப்பாகச் செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜிப் லைனில் பயணித்த நபர் "அல்லாஹு அக்பர்" என்று மூன்று முறை கூறி, துப்பாக்கிச் சூடு நடத்த தொடங்கியதாக ரிஷி பட் கூறியுள்ளார்.

மேலும் படிக்க |  “தீவிரவாதிகளை வேட்டையாடுவோம்” பல்ஹாம் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு..

மேலும் படிக்க | பாகிஸ்தான் ராணுவ தளபதியும், பின்லேடனும் ஒண்ணு தான்... Ex அமெரிக்க அதிகாரி தடாலடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News