)
Vote Chori, Kerala Allegation: தேர்தல் ஆணையமும், ஆளும் பாஜகவும் இணைந்து வாக்காளர் பட்டியலில் பெரிய முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடந்த வாரம் மிகப்பெரிய குற்றச்சாட்டை வைத்திருந்தார். அதற்கு மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியின் வாக்காளர் பட்டியலை முன்வைத்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்வலைகள் கிளம்பிய நிலையில், கேரளாவிலும் இதுபோன்ற வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பெண் ஒருவர தன்னுடைய குடியிருப்பு முகவரியில் மட்டும் 9 போலி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெண் ஒருவர் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரளாவில் பாஜக கடந்த மக்களவை தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அதுவும் தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ள திருச்சூர் மாவட்டத்தில்தான்... ஆம், திருச்சூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டுதான் நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்று, மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார். அந்த வகையில், பாஜக வெற்றி பெற்ற தொகுதியில் மீண்டும் வாக்காளர் பட்டியல் முறைகேடு குற்றச்சாட்டு எழுந்திருப்பது பெரும் கவனத்தை பெற்றிருக்கிறது.
பிரசன்னா என்ற அந்த பெண் கொடுத்த புகாரில், "திருச்சூர் நகரில் எனது குடும்பத்தில் எனக்கு ஒருவருக்கு மட்டுமே திருச்சூரில் வாக்கு இருக்கிறது. அதன்படி, மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் வாக்கு செலுத்தினேன்" என குறிப்பிட்டுள்ளார். மற்ற குடும்பத்தினர் அனைவருக்கும் வாக்கு என்பது திருச்சூரில் உள்ள பூச்சினிபாடம் என்ற கிராமத்தில் இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.
திருச்சூரில் பூங்குன்னம் பகுதியில் உள்ள 4C, கேப்பிடல்ஸ் வில்லேஜ் அப்பார்ட்மண்ட்ஸ் என்ற முகவரி கொண்ட வீடு பிரசன்னாவுக்குச் சொந்தமானதாகும். அப்படியிருக்க, அந்த முகவரியின் கீழ் இன்னும் வேறு 9 பெயர் குடியிருப்பதாக சரிபார்ப்புக்கு வந்தவர்கள் கேட்டபோது இவருக்கு அதிர்ச்சியாக இருந்ததுள்ளது.
"தனக்கு அந்த 9 பேரில் யாரையும் தெரியாது. நாங்கள் இங்கு 4 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் முகவரியில் எங்களுக்கே தெரியாமல் பெயர்களை சேர்த்திருப்பது சரியல்ல" என அவர் புகார் அளித்தார். பிரசன்னா தனது புகாரை நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்தார்.
இதைப் போல், திருச்சூர் பூங்குன்னம் பகுதியில் உள்ள வாட்டர் லில்லி மற்றும் கேப்பிட்டல் வில்லேஜ் போன்ற அடுக்குமாடி குடியிருப்புகளிலும் இதுபோன்ற வாக்காளர் முறைகேடுகள் சில கண்டறியப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றஞ்சாட்டினர். மேலும், வேறு மாவட்டங்களில் இங்கு மாறி வருபவர்களுக்கு காலியாக இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளின் முகவரியே போலியாக பதிவு செய்ய பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தின் தீவிர தன்மை மற்றும் பிரச்னை குறித்து அந்த அடுக்குமாடி குடியிருப்பின் உண்மையான உரிமையாளருக்கு கூட தெரிவதில்லை என்கின்றனர்.
வாக்காளர் பதிவில் இதுபோன்று பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என சிபிஎம் தலைவரும், திருச்சூரின் முன்னாள் வேட்பாளருமான விஎஸ் சுனில் குமார் குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும் பூத்தில் மட்டும் 280 விண்ணப்பங்கள் ஒன்றாக வந்தன, அவை அனைத்தும் மற்ற தொகுதிகளில இருந்து வந்தவர்களின் பெயரும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் ஆவர். முகவரிச் சான்றாக அஞ்சல் அட்டையை காட்டினாலே போதுமானது என வாக்காளர்களை பதிவு செய்ய அனுமதிப்பதன் மூலம் தேர்தல் ஆணையம் இந்த செயல்முறையை எளிதாக்கி இருக்கிறது. இதுவும் பிரச்னை ஒரு காரணம் என குற்றஞ்சாட்டுகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ