Pahalgam Attack: ஜம்மு காஷ்மீரின் பகல்காம் நகரில் உள்ள பைசரன் புல்வெளி பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் (ஏப். 22) துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் உயிரிழந்தனர், பலரும் படுகாயம் அடைந்தனர்.
இந்த பயங்கரவாத சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பது மட்டுமின்றி பயங்கரவாத செயல்களை கண்டித்தும் குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன. இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றம் நிலவி வருகின்றனது.
Pahalgam Attack: லக்ஷர்-இ-தொய்பா வீடியோ
குறிப்பாக, பகல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானில் இயங்கி வரும் லக்ஷர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்' பொறுப்பேற்றதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், பகல்ஹாம் தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் இந்தியா நாடகம் ஆடுவதாகவும் லக்ஷர்-இ-தொய்பாவின் துணைத் தலைவர் சைபுல்லா கசூரி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
சைபுல்லா கசூரி இந்திய ஊடகங்களை குற்றஞ்சாட்டி பேசிய ஒரு வீடியோ இணையத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறது. அந்த வீடியோவில் அவர், உலக நாடுகளின் மத்தியில் பாகிஸ்தானின் மதிப்பை கெடுக்கும் பொருட்டு இந்தியா செயல்படுவதாகவும், இந்தியாவுக்கு கண்மூடித்தனமாக ஆதரவளிக்க வேண்டாம் என உலக மக்களிடம் கேட்டுக்கொள்வதாக அதில் தெரிவித்துள்ளார். மேலும், உண்மையின் பக்கம் நிற்குமாறும் அதில் தெரிவித்துள்ளார்.
Pahalgam Attack: தாக்குதலுக்கு பின்னணியில் இந்தியா...?
மேலும் இந்தியாவை குற்றஞ்சாட்டிய அவர், "இந்த தாக்குதலுக்குப் பின்னால் இந்தியாவே இருக்கிறது என்பதால்தான், அவர்கள் இந்த நாடகத்தை நிகழ்த்துகின்றனர்" என்றார். பகல்காம் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கோ அல்லது பாகிஸ்தானின் குழுக்கள் அல்லது அமைப்புகளுக்கோ எந்த தொடர்பும் இல்லை என சைபுல்லா கசூரி அந்த வீடியோவில் பேசி உள்ளார்.
இருப்பினும், சைபுல்லா கசூரி பேசும் அந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை என்பது வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முன்னதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப்பும், பாகிஸ்தானுக்கும், பகல்காம் தாக்குதலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கூறியிருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது.
அதேநேரத்தில், இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, SAARC விலக்கு விசாக்கள் ரத்து, பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை என 5 அதிரடி முடிவுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேநேரத்தில், முப்படைகளையும் தயாராக இருக்கும்படி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியிருக்கும் மத்திய அரசு, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் உடனே இந்தியாவை விட்டு வெளியேறும்படியும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் படிக்க | பாகிஸ்தான் ராணுவ தளபதியும், பின்லேடனும் ஒண்ணு தான்... Ex அமெரிக்க அதிகாரி தடாலடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ