Wife Threatens To Kill Husband In First Night : உ.பியில் திருமணமான பெண் ஒருவர், கணவனை கொலை செய்வதாக மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

Wife Threatens To Kill Husband In First Night : மனைவியே மாஸ்டர் பிளான் பாேட்டு தனது கணவனை தேனிலவில் தீர்த்துக்கட்டிய செய்தியை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டோம். ராஜா ரகுவன்ஷியின் அந்த மரணத்தின் சுவடு மறைவதற்குள் அடுத்தடுத்து, மனைவிகள் கணவன்மார்களுக்கு எதிராக அதிர்ச்சி செயல்களில் ஈடுபடுவது தற்பாேது வாடிக்கையாகி வருகிறது. நம் சமூகத்தில், கணவன் மனைவியை அடிப்பது சகஜமாகி விட்டதால், எத்தனை பெண்கள் வன்கொடுமையால் இறந்து போனாலும், காயப்பட்டாலும் அதனை நாம் சகஜமாக எடுத்துக்கொள்கிறோம். ஆனால், அவ்வப்போது அதற்கு ஆபோசிட்டாக நடக்கும் விஷயங்களை ஏற்றுக்கொள்ள மட்டும் ஏனோ, மனம் மறுக்கிறது. இப்போதும், அப்படி ஒரு சம்பவம்தான், உ.பியில் நடந்திருக்கிறது.
முதலிரவில் காத்திருந்த அதிர்ச்சி!
இந்தியாவின் பெரிய மாநிலங்களுள் ஒன்றாக இருக்கிறது உத்தர பிரதேசம். இங்கு, எப்போதும் பல வில்லங்கமான மற்றும் வினோதமான விஷயங்கள் நடப்பது வழக்கம். தற்போதும், அப்படி ஒரு சம்பவம் உத்திர பிரதேசத்தில் இருக்கும் பிரயாக்யராஜ்ஜில் நடந்துள்ளது.
26 வயதான கேப்டன் நிஷாத் என்கிற அந்த நபர், சித்தாரா என்கிற பெண்ணை ஏப்ரல் 29ஆம் தேதி திருமணம் செய்திருக்கிறார். இவர், கராச்சனா தீஹா எனும் கிராமத்தை சேர்ந்தவ. திருமணம் ஆன பின்பு, அந்த பெண் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி மாமியார் வீட்டிற்கு வந்திருக்கிறார். இவர்களின் திருமண ரிசப்ஷன் மே 2ஆம் தேதி அன்று நடந்திருக்கிரது. இதில் விருந்தினர்கள் எல்லாரும் கலந்து கொண்டு சென்ற பிறகு, மணப்பெண்ணுக்கும் மணமகனுக்கும் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆசையாக முதலிரவு அறைக்கு சென்ற மணமகனுக்கு அதிர்ச்சியும் அங்கு காத்திருந்தது.
மிரட்டிய மனைவி!
நிஷாத், முதலிரவு அறைக்குள் சென்றபோது, அங்கு கட்டிலில் அவரது மனைவி தலையில் முக்காடு போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறார். அவரது முக்காடை விலக்கிய போது, கையில் ஷார்ப்பான கத்தியை வைத்துக்கொண்டு, கண்களில் கோபத்துடன் இருந்திருக்கிறார் மனைவி. பின்னர், “என்னை தொடாதே, நான் அமனுக்கு சொந்தமானவள். என்னை தொட நினைத்தால், உன்னை 35 பீஸ்-ஆக வெட்டிவிடுவேன்” என்று மிரட்டியிருக்கிறார். தான் அமன் என்கிற ஒருவரை காதலிப்பதாகவும், பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில்தான் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இதையடுத்து அதிர்ச்சியான கணவன், அவரை தொடாமல் பத்தடி பின்னால் போயிருக்கிறார். அந்த இரவு, உயிர் பயம் காரணமாக தான் உறங்கவே இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இதே போல 3 இரவுகள் கழிந்துள்ளது. மனைவி, நள்ளிரவுக்கு பின்னரே தூங்கியிருக்கிறார். தானும், மனைவியால் கொல்லப்பட்ட கணவன்மார்களுள் ஒருவராகி விடக்கூடாது என்று நினைத்த அவர், தலைப்பு செய்தியாக மாறாமல் இருக்க உறங்காமலேயே இருந்திருக்கிறார்.
மே 3ஆம் தேதி, அனைத்தையும் தன் தாயிடம் தெரிவித்திருக்கிரார், நிஷாத். இதையடுத்து குடும்பத்துக்குள் பிரச்சனை வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. சித்தாராவின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து அவரையும் வரவழைத்து இருக்கின்றனர். இதையடுத்து பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்துள்ளது. அதில் அமனை மறந்து விடுமாறு பெரியவர்கள் வலியுறுத்தி, அவரிடம் கையெழுத்தும் பெற்றுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகும் அந்த பெண், தனது கனவனை மிரட்டியிருக்கிறார். இதையடுத்து, மே 30ஆம் தேதியன்று மாமியார் வீட்டின் சுவரை எகிறி குதித்து அந்த பெண் தப்பியோடி இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து போலீஸில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. இதில் மனைவியால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட அந்த நபர், அவர் திரும்ப வந்தாலும் அவருடன் வாழ மாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ