Andhra Pradesh Man Killed His Pregnant Wife : உலகின் பல்வேறு இடங்களில், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பார்த்து வருகிறோம். சில நாட்களுக்கு முன்புதான், இந்தியாவின் புனித ஸ்தலமாக கருதப்படும் வாரணாசியில் ஒரு 19 வயது பெண் 23 பேரால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வடுவே இன்னும் மாறாத இந்த தருணத்தில், ஒரு கர்ப்பிணி பெண் தனது கணவனின் கையால் கொல்லப்பட்டிருக்கும் விவகாரம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட இருந்தவர்..
ஆந்திராவில் இருக்கும் விசாகப்பட்டினத்தில்தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இங்கு வசித்து வந்த 27 வயது பெண், அனுஷா. 9 மாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கும், ஞானேஸ்வர் என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. அனுஷா, கர்ப்பமானதை தொடர்ந்து, இவர்கள் இருவரும் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று செக்-அப் செய்து வந்துள்ளனர்.
அப்படி, கடைசியாக செக்-அப் சென்ற போது உடனடியாக பிரசவத்திற்கு அட்மிட் ஆக மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது. ஆனால், சில காரணங்களுக்காக அவர்கள் மறு நாள் பிரசவத்தை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து இருவரும் வீடு திரும்பியிருக்கின்றனர்.
வீட்டிற்கு வந்த அந்த இரவு, ஞானேஸ்வர்-க்கும், அனுஷாவிற்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. வாக்குவாதம் முற்றியதால், கோபத்தின் உச்சத்திற்கே சென்ற ஞானேஸ்வர், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தான் செய்த தவறின் வீரியத்தை உணர்ந்த அவர், அனுஷாவை எழுப்ப முயற்சி செய்திருக்கிறார். அனுஷா எழுந்து கொள்ளாததை தொடர்ந்து நண்பர்களுக்கு போன் செய்து, தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
கர்ப்பிணி கொலை..
அனுஷாவை, மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றார், ஞானேஸ்வர், அங்கு அனுஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியிருக்கின்றனர். கூடவே, இந்த மரணம் இயற்கையாக நிகழ்ந்தது இல்லை என்றும் கணித்திருக்கின்றனர். இதையடுத்து, ஞானேஸ்வரே போலீஸிடம் சென்று சரணடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அனுஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
காரணம் என்ன?
நடந்த சம்பவம் குறித்து போலீஸாரிடம் கூறிய ஞானேஸ்வர், தனது மனைவி மீது கொலை செய்யும் அளவிற்கு கோபம் வந்ததற்காக காரணத்தையும் தெரிவித்திருக்கிறார். தனக்கு வேறு யாருடனோ தொடர்பு இருக்கிறது என்று, அனுஷா தன்னை டார்ச்சர் செய்ததாகவும், இதனால் அடிக்கடி தங்களுக்குள் சண்டை எழுந்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும், தனக்கு கேன்சர் இருப்பதாக கூறி, தன்னை விட்டுவிடுமாறு அனுஷாவிடம் சொன்னதாகவும், அவர் அதை கேட்காமல் தன்னுடனேயே இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த விஷயம் குறித்து அனுஷாவின் குடும்பத்தினருக்கு தெரியும் என்றும், தனது குடும்பத்தினருக்கு தெரியாது என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க | கார் டிக்கியில் தொங்கிய கை! அச்சமூட்டும் வைரல் வீடியோ..
மேலும் படிக்க | Viral Video: சூட்கேஸ் உள்ளே இளம்பெண்... ஹாஸ்டலுக்கு கொண்டசெல்ல முயன்ற மாணவன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ