Former Karnataka DGP Om Prakash Found Dead At Home : நாளுக்கு நாள், நாளிதழை திருப்பினாலே நம்ப முடியாத விஷயங்களை செய்திகளாக பார்க்க முடிகிறது. கணவன்-மனைவியை கொல்வதும், மனைவியை கணவன் கொன்று போடுவதும் இப்போது மிகவும் சாதாரண நிகழ்வாகி விட்டது. இப்படிப்பட்ட விஷயங்களில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள சிலர் காவல் அதிகாரிகளிடம் போவதுண்டு. ஆனால், அந்த காவல் அதிகாரியே கொடூரமாக கொல்லப்படும் போது என்ன செய்வது? அப்படிப்பட்ட சம்பவம் ஒன்றுதான் தற்போது பெங்களூருவில் நிகழ்ந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
காெலை செய்யப்பட்ட முன்னாள் காவல் அதிகாரி!
கர்நாடகாவின் காவல்துறை தலைமை இயக்குநராக இருந்தவர், ஓம் பிரகாஷ். 68 வயதாகும் இவர், உடலில் பல காயங்களுடன் பெங்களூருவில் இருக்கும் தனது வீட்டில், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்திருக்கிறார். குறிப்பாக, மார்பு மற்றும் வயிற்றில் இவருக்கு அதிக காயங்கள் இருந்திருக்கிறது.
2017ஆம் ஆண்டு வரை, காவல்துறையில் இருந்த ஓம் பிரகாஷ் அதன் பிறகு வேலையில் இருந்து ஓய்வுபெற்றார். அதிலிருந்து, தனது மனைவி பல்லவி மற்றும் 2 பிள்ளைகளுடன் வசித்து வந்திருக்கிறார்.
ஓம் பிரகாஷின் கொலை, ஞாயிற்றுக்கிழமையான நேற்று நடந்திருக்கிறது. கொலை சம்பவத்தையும், கொலை நடந்த இடத்தையும் ஆராய்ந்த போலீஸார், இதில் அந்தேகம் இருப்பதாக கூறி வழக்கு பதிவு செய்திருக்கின்ரானர். இதில், அவரது மனைவி சந்தேகத்தின் பேரில் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மகனின் வாக்குமூலம்:
உயிரிழந்த ஓம் பிரகாஷிற்கு கார்திக்கேஷ் என்ற மகன் இருக்கிறார். இவர், போலீஸாரிடம் கொடுத்திருக்கும் வாக்குமூலம் கேட்போரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. தனது தாய், ஓம் பிரகாஷை கொன்று விடுவேன் என பலமுறை மிரட்டியதாக அவர் கூறியிருக்கிறார். இது போன்ற மிரட்டல்கள் வரும் போதெல்லாம், ஓம் பிரகாஷ் தனது தங்கையுடன் சென்று தங்கி விடுவாராம். இந்த கொலை நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு, அவரது மகள் க்ருதி வீட்டில் வந்து தங்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அவரது அனுமதியின்றி அவரை வீட்டிற்கு வரவழைக்கப்பட்டதாகவும் கார்த்திகேஷ் கூறியிருக்கிறார்.
இந்த கொலை நடக்கும் போது கார்த்திக்கேஷ் வீட்டில் இல்லை என்றும் தெரிய வந்திருக்கிறது. மாலை வேளையில்தான், தனது தந்தை இறந்த தகவலை அருகில் இருந்தவர்கள் இவரக்கு போன் செய்து சொன்னதாகவும் கூறியிருக்கிறார். இந்த தகவலை கேள்விப்பட்டவுடன் தான் வீட்டிற்கு விரைந்து வந்ததாகவும், அப்போது தனது தந்தையின் உடல் ரத்த வெள்ளத்தில் இருப்பதாகவும் பேசியிருக்கிறார். அவரது உடலருகில் ஒரு கண்ணாடி பாட்டிலும் உடைந்த நிலையில் இருந்திருக்கிறது.
மேலும் பேசிய அவர், தனது தாயும், சகோதரியும் மன நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மன அழுத்தத்தில் இருந்த இவர்கள் தனது தந்தையுடன் அடிக்கடி சண்டையிட்டதாகவும் கூறியிருக்கிறார். இதனால், இந்த கொலையில் அவர்களுக்கு சம்பந்தம் இருக்கலாம் என்றும் அவர் கூறியிருக்கிரார்.
12 மணி நேர விசாரணை..
பல்லவி மற்றும் அவரது மகள் க்ருதி ஆகியோரிடம் போலீஸார் 12 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர். ஓம் பிரகாஷின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவர் 2 கத்திகளால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
ஓம் பிரகாஷ் மற்றும் அவரது மனைவியிடையே சொத்து பிரச்சனை காரணமாக அடிக்கடி தகறாறு எழுந்ததாகவும், இந்த கொலை அதன் விளைவாக நிகழ்ந்திருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
ஓம் பிரகாஷை கொன்ற பிறகு, அவரது மனைவி வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒருவருக்கு வீடியோ கால் செய்து தான் ஒரு மிருகத்தை கொன்றிருப்பதாக கூறியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், இன்னும் எந்த கைது நடவடிக்கையும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மகளின் மாமனாருடன் தாய்க்கு காதல்! நகை, பணத்துடன் ஓட்டம்..வைரல் செய்தி